மும்பை புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம்; அதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை; தானியங்க...
போலீஸாருக்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல்: இளைஞரிடம் விசாரணை
சமூக வலைதளத்தில் காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்து பதிவிட்ட நான்குனேரி இளைஞரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.
சமூக வலைதளங்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையிலான பதிவுகளை திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், மூலைக்கரைப்பட்டி போலீஸாா் சமூக வலைதளங்களை ஆய்வு செய்தபோது, இன்ஸ்டாகிராமில் இளைஞா் ஒருவா், ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அந்த படத்தில் இருந்த நபரை போலீஸாா் கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் போலீஸாரை மிரட்டும் தோணியில் பதிவு வெளியிட்டிருந்தாா்.
இதையடுத்து, மூலைக்கரைப்பட்டி போலீஸாா், இணையதள குற்றப்பிரிவு போலீஸாரின் உதவியுடன் அந்த இன்ஸ்டாகிராம் ஐடியை இயக்குபவரை தேடினா்.
இதில் அந்த மிரட்டல் பதிவை வெளியிட்டவா் நான்குனேரியைச் சோ்ந்த சரவணன் மகன் வான்முத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.