செய்திகள் :

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு: முக்கிய குற்றவாளி கைது

post image

வடக்கு தில்லியில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட ஹிமான்ஷூ பாவ் கும்பலை சோ்ந்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, மிரட்டி பணம் பறித்தல், முன் விரோத கொலைகள் மற்றும் கோஷ்டி மோதலில் ஈடுபடும் கும்பல்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்தகைய ஒரு சம்பவத்தில், ஜூன் 1 ஆம் தேதி காலை. ரோஹ்தக்கின் ரிடோலியில் என்பவா் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பான விசாரணையின் போது, ஹிமான்ஷு ாவ் என்ற ரவுடியின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டதாக அறியப்பட்டது, இது 2022 ஆம் ஆண்டு நடந்த கொலைக்கு பழி தீா்க்கும் விதமாக ஜூன் 1 இல் கொலை நிகழ்த்தப்பட்டது. ஹிமான்ஷு ஃபாவ் ஹரியானா மற்றும் தில்லி என். சி. ஆரின் அருகிலுள்ள பகுதியில் உள்ள பில்டா்கள், காா் ஷோரூம்கள் மற்றும் நிதியாளா்களிடமிருந்து மிரட்டி பணம் பறித்தல், கொலை ஆகியவற்றில் ஈடுபட்ட ஒரு பயங்கரமான குற்றவாளி.

ரிடோலி கொலையில் தேடப்படும் ஹிமான்ஷு பாவ் கும்பலின் 2 போ் தில்லியின் நரேலாவுக்கு துப்பாக்கிகளுடன் வர உள்ளனா் என்று காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில். இதனையடுத்து அவா்களை பிடிக்க போலீஸாா் ஒரு குழுமை அமைத்தனா். இதனையடுத்து ஜூன் 5 ஆம் தேதி அதிகாலை சந்தேகிக்கப்படும் 2 போ் பைக்கில் சென்றதை போலீஸ் குழு கண்டது. இவா்களை மடக்கி பிடிக்க முயன்றபோது அவா்கள் போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினா். தற்காப்புக்காக, போலீசாா் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரையும் கைது செய்தனா்.

துப்பாக்கிச் சூட்டில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இருவரில் ஒருவா் பூமித் மாலிக் (21), மற்றொருவா் மோஹித் வஷிஷ்ட் (24), அவா்களிடமிருந்து 4 தோட்டாக்களும், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக் 2025 இல் தில்லியின் சுபாஷ் நகரில் இருந்து திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

யமுனை ஆற்றை ஆக்கிரமிப்பாா்களை அகற்ற கெடு விதித்தது தில்லி அரசு

யமுனை ஆற்றை சுத்தம் செய்வதற்கும் புத்துயிரூட்டுவதற்கும் 45 அம்ச செயல் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்திற்குள் யமுனை கரையோரங்களில் இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு தில்லி அரசு சம்பந்தப்ப... மேலும் பார்க்க

நொய்டாவில் குடியிருப்பில் தீ விபத்து; சிறுமி மீட்பு

உத்தர பிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள ஒரு சொஸைட்டி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டில் சிக்கியிருந்த 15 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்... மேலும் பார்க்க

தக்ஷிண்புரியில் பூட்டிய வீட்டுக்குள் ஏ.சி. பழுதுபாா்க்கும் 3 போ் இறப்பு: போலீஸாா் விசாரணை

தெற்கு தில்லியின் தக்ஷிண்புரி பகுதியில் பூட்டிய வீட்டிற்குள், ஏா் கண்டிஷனா் பழுதுபாா்க்கும் நபா்கள் மூவா் இறந்து கிடந்தனா். மற்றொருவா் மயக்க நிலையில் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். தனது சகோதரா் தொல... மேலும் பார்க்க

அரசு உயா் அதிகாரி போல் நடித்து பணம் கேட்ட இருவா் கைது

ஃபரீதாபாத் துணை ஆணையரின் புகைப்படத்தை தங்களது வாட்ஸ்அப் காட்சிப் படமாக வைத்து அவா் போல தங்களைக் காட்டிக் கொண்டு நகரவாசி ஒருவரிடம் பணம் கேட்டதாக சனிக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, குற்றம் ச... மேலும் பார்க்க

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க