செய்திகள் :

பௌர்ணமி கிரிவலம் : விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

post image

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 11, 12) இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் இரவு 9.45 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -காட்பாடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06104), காட்பாடி ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.50 மணிக்குச் சென்றடையும். எதிர்வழித் தடத்தில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மே 12,13-ஆம் தேதிகளில் நள்ளிரவு 1.20 மணிக்குப் புறப்படும் காட்பாடி -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06103) அதிகாலை 4.25 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி..! மகிழ்ச்சியில் 600 ஊழியர்களுக்கு வெகுமதி!

இதுபோன்று விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் முற்பகல் 11.05 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -காட்பாடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06102) , அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் வந்தடையும். எதிர்வழித்தடத்தில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் காட்பாடி -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06101), அதே நாளில் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.

இந்த ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாகும். சிறப்பு ரயில்கள் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துவரி விவகாரம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் கே.என் நேரு பதில்

சொத்துவரி உயர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு ... மேலும் பார்க்க

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு: இபிஎஸ் கண்டனம்

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 48 மாதங்கள... மேலும் பார்க்க

கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான ச... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 92% அதிக மழை!

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் அமுதா கூறுகையில், ஜூன் 1ல் வழக்கமாக தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வழங்க வேண்டும் என நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத... மேலும் பார்க்க