செய்திகள் :

பௌர்ணமி கிரிவலம் : விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

post image

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 11, 12) இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் இரவு 9.45 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -காட்பாடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06104), காட்பாடி ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.50 மணிக்குச் சென்றடையும். எதிர்வழித் தடத்தில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மே 12,13-ஆம் தேதிகளில் நள்ளிரவு 1.20 மணிக்குப் புறப்படும் காட்பாடி -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06103) அதிகாலை 4.25 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி..! மகிழ்ச்சியில் 600 ஊழியர்களுக்கு வெகுமதி!

இதுபோன்று விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் முற்பகல் 11.05 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -காட்பாடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06102) , அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் வந்தடையும். எதிர்வழித்தடத்தில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் காட்பாடி -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06101), அதே நாளில் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.

இந்த ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாகும். சிறப்பு ரயில்கள் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம்.... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி: முதல்வர், அமைச்சர்கள் உயரதிகாரிகள் பங்கேற்பு!

சென்னை: நாட்டின் பாதுகாப்புக்காக சேவையாற்றி வரும் ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று மாலை முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்... மேலும் பார்க்க

மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது! - அண்ணாமலை

இந்திய மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அப்ப... மேலும் பார்க்க

போா்ப் பதற்றம்: தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. உயிா் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்த... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இன்று பேரணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தனது தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (மே 10) பேரணி நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பாகிஸ்தான... மேலும் பார்க்க

6,144 சுகாதார மையங்களில் தடையின்றி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள 6,144 சுகாதார மையங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பொது சுக... மேலும் பார்க்க