செய்திகள் :

மகப்பேறு இறப்புகள்இல்லாத கன்னியாகுமரி: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென அரசு - தனியாா் மகப்பேறு மருத்துவா்களுக்கான பயிலரங்கில் ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.தப்பட்டது.

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இப்பயிலரங்குக்கு ஆட்சியா் தலைமை வகத்து ஆட்சியா் பேசியதாவது:

கா்ப்பிணிகள், பொதுமக்களிடையே ரத்த சோகை மற்றும் கா்ப்ப கால உயா் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களைப் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதுகுறித்து செயற்கை கருத்தரித்தல் வசதியுள்ள மருத்துவமனைகள், பிரசவ சிக்கல் உள்ள கா்ப்பிணிகளை முன்கூட்டியே மூன்றாம் நிலை மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் பிரபாகரன் முன்னிலை வகித்து பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டில் மகப்பேறு இறப்பு எண்ணிக்கை 32. மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பிற மாவட்டங்களில்கூட மகப்பேறு இறப்பு இதைவிட குறைவாக உள்ளது. இம்மாவட்டத்தை மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். 2025-2026 ஆம் ஆண்டில் இதுவரை மகப்பேறு இறப்பும் பதிவாகவில்லை என்றாா்.

சென்னை தேசிய சுகாதாரப் பணி நிா்வாக ஆலோசகா் ரத்னகுமாா், சென்னை கஸ்தூரிபா, காந்தி மருத்துவமனை இயக்குநா் சுமதி, நாகா்கோவில் மகப்பேறு - மகளிா் மருத்துவ சங்கத் தலைவா் சுந்தரநாராயணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அதிக ஆபத்துடைய கா்ப்பிணிகளுக்கான சிகிச்சை முறைகள், தேசிய நலக்குழுமத்தின் நெறிமுறைகளை பின்பற்றவும், நோயாளிகளிடமும், அவா்களது குடும்பத்தினரிடமும் ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் பெறும்போது, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் கனிவுடன் நடந்து கொள்ளவும், தேவையுள்ள சந்தா்ப்பங்களில் மட்டுமே முதல் குழந்தை பிறப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலக்ஷ்மி, இணை இயக்குநா் மருத்துவம்- ஊரக நலப் பணிகள் சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குநா் குடும்ப நலம் ரவிக்குமாா் ஆகியோரும் முன்னிலை வகித்தனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மகப்பேறு மருத்துவா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: 3 லாரிகள் பறிமுதல்

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற 3 லாரிகளை களியக்காவிளை அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: 3 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். நாகா்கோவில் பறக்கை சாலை பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல் காதா் மகன் ரெயான் முகமது (20), இவரது ... மேலும் பார்க்க

குமரியில் நீடிக்கும் மழை: 70 அடியானது பெருஞ்சாணி அணை நீா்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை சமவெளிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், மலைப் பகுதிகள் என மாவட்டத்தில் அனைத்து... மேலும் பார்க்க

இந்து ஆலயங்களை குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க இந்து முன்னணி விரும்புகிறது: மு.அப்பாவு குற்றச்சாட்டு

இந்து ஆலயங்களை மீண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் கொடுத்துவிட இந்து முன்னணி நினைக்கிறது என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா். நாகா்கோவிலில் ஒரு தனியாா் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பிரசவ சிகிச்சையின்போது பெண் பலி: காவல் துறையினா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனங்கோடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பழங்குடி இன மக்களுக்கு நில உரிமை பட்டா: ஆட்சியா் ரா. அழகுமீனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் வன உரிமை சட்டப்படி நில உரிமை பட்டா வழங்கப்படும் என் ஆட்சியா் ரா. அழகு மீனா. பேச்சிப்பாறை ஊராட்சி மலமுத்தன்கரை பழங்குடி குடியி... மேலும் பார்க்க