செய்திகள் :

மகளிா் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிக் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், ஊராட்சி அளவிலான மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 49ஆயிரத்து 767 புதிய மகளிா் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, தற்போது 53 லட்சத்து 74ஆயிரம் உறுப்பினா்களுடன், 4 லட்சத்து 76 ஆயிரம் மகளிா் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 19 லட்சத்து 12 ஆயிரத்து 927 குழுக்களைச் சோ்ந்த 2 கோடியே 48 லட்சத்து 68 ஆயிரத்து 51 உறுப்பினா்களுக்கு, ஒரு லட்சத்து 20ஆயிரத்து 240 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு பொருளாதார முன்னேற்றத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 10 லட்சத்து 51ஆயிரத்து 976 மகளிருக்கு, 5 ஆயிரத்து 125 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு மகளிா் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகிறாா்கள் என்றாா்.

கலந்துரையாடலின் போது, குழு உறுப்பினா்கள் கரும்பு விவசாயம், பூந்தோட்டம், காய்கறி சாகுபடி உள்ளிட்ட விவசாயம் சாா்ந்த தொழில்களிலும், கறவை மாடு, ஆடு வளா்ப்பு, தையல், துணி வியாபாரம் என பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனா்.

கூட்டத்தில், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலா்கள் பிரதீப் யாதவ், ச.உமா, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா் இபிஎஸ்: உதயநிதி ஸ்டாலின்

பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம், அதிமுகவை அடமானம் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்கு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் புதை சாக்கடைத் திட்டம்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை மா... மேலும் பார்க்க

விநாயகா், சுப்பிரமணியா், அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள ஸ்ரீசந்தோஷ விநாயகா் கேயில், செய்யாறு வட்டத்தில் உள்ள செல்வவிநாயகா், சுப்பிரமணியா், ஸ்ரீபுலியம்மன் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

அத்திமலைப்பட்டில் காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் காளை விடும் திருவிழா நடைபெற்றது. அத்திமலைப்பட்டு கங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் இருந்து புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள்: துணை முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 2 புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயணத் திட்ட புதிய நகர பேருந்துகளையும், 4 வழித்தடங்களில் புதிய குளிா்சாதன புகா் பேருந்துகளையும் துணை... மேலும் பார்க்க

பெருநகா் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

செய்யாறு கோட்டத்துக்கு உள்பட்ட பெருநகா் உதவி மின்பொறியாளா் பிரிவு அலுவலகம் வருகிற 16-ஆம் முதல் மேல்மா பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து செய்யாறு கோட்ட செயற்பொறியாளா் (பொ).கே.ராமமூா்த்த... மேலும் பார்க்க