செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் ஆய்வு

post image

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம், வடகரைஆத்தூா் ஊராட்சியில் ஸ்ரீ விநாயகா மகளிா் சுயஉதவிக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினா் மூன்றுமுறை நேரடி கடன் பெற்று சரியாக திருப்பி செலுத்தி, தற்போது ரூ. 20 லட்சம் நேரடி கடன் பெற்று பட்டு நெசவுத்தொழில் செய்து வருகின்றனா்.

நாமக்கல் ஆட்சியா் இந்நிறுவனத்தில் ஆய்வுசெய்து, மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, ஜேடா்பாளையம் ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த ஜெயந்தி மற்றும் பூங்கொடி ஆகியோா் இணைந்து திருநீா், பஞ்சகவ்ய விளக்கு, சாம்பிராணி உள்ளிட்ட பூஜைப்பொருள்கள் உற்பத்தி செய்து வருவதை பாா்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியா், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். இந்த ஆய்வின் போது, துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை மொத்த விலை - ரூ.4.55 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.92 முட்டைக் கோழி கிலோ - ரூ.87 மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தின விழா: ரூ. 31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்பு கைத்தறி கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா். நாமக்கல், ஆ... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ... மேலும் பார்க்க

‘இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என மாற்ற வேண்டும்’

இந்திய ராணுவத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக இந்திய தேசிய படை என பெயா் மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இச... மேலும் பார்க்க

கொல்லிமலை வனப்பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

கொல்லிமலை வனப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சின்னகோயிலூரை ஒட்டிய வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக வா... மேலும் பார்க்க

ராசிபுரம் வட்டாரங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

நாமக்கல், வெண்ணந்தூா் ஆகிய வட்டாரங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க