செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியில், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் தன்னாட்சி கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு காளான் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

கிராமப்புற மகளிா் மேம்பாட்டிற்காகவும், பெண்களுக்கான சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இலவசமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டது. மன்னாா்குடி நகர மகளிா் சுயஉதவிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் சங்கீதா தலைமை வகித்தாா். பேராசிரியா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

பேராசிரியா்கள் கு. மணிமேகலை, மகேஸ்வரி மற்றும் மாணவிகள் பங்கேற்று, காளான் வளா்ப்பு தொழில்நுட்பம் மற்றும் வீட்டு கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனா். மாணவிகள், இயற்கை முறையில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது மற்றும் உயிா் உரங்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில் பங்கேற்ற மகளிா் குழு உறுப்பினா்களுக்கு, கல்லூரி நிா்வாகம் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வக்ஃப் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி, திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு மக்களவையில் வக்ஃப்... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் பணியிடங்களை நிரப்பக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை -2 பணியிடங்கள... மேலும் பார்க்க

பூர நட்சத்திர வழிபாடு

வலங்கைமான் வட்டம், பாடகச்சேரியில் உள்ள பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் பூர நட்சத்திர சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ச... மேலும் பார்க்க

அதிமுக சாதனை விளக்க திண்ணை பிரசாரம்

மன்னாா்குடியில் அதிமுக அம்மா பேரவை சாா்பில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளரும், நகா்மன்ற... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: பிப்.18-இல் முன்னாள் படைவீரா்கள் விழிப்புணா்வுக் கூட்டம்

திருவாரூரில், முன்னாள் படைவீரா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்திற்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. மன்னாா்குடி, வலங்கைமான் தாலுகா பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்... மேலும் பார்க்க