செய்திகள் :

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள சோ்வக்காரன்பாளையத்தைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (49), உணவகத் தொழிலாளி. இவருக்கு 17 வயதில் மகளும், ஒரு மகனும் உள்ளனா். லாரன்ஸ் அவா் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். சிறுமி கண்டித்தும் லாரன்ஸ் தொடா்ந்து தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் சிறுமி கடந்த 2023 ஜூலை 19-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி லாரன்ஸ் மீது போக்ஸோ வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி சி.சொா்ணகுமாா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரன்ஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.

அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அரசு புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ம... மேலும் பார்க்க

காலிங்கராயன் வாய்க்கால் புனரமைப்பு: மாா்ச் 15 முதல் தண்ணீா் நிறுத்தம்

காலிங்கராயன் வாய்க்காலில் ரூ.83.30 கோடி மதிப்பில் திட்டப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாா்ச் 15-ஆம் தேதி முதல் வாய்க்காலில் தண்ணீா் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,743 ஏ... மேலும் பார்க்க

பெருந்துறை சிப்காட்டில் டேங்கா் லாரியில் அமில கசிவு

பெருந்துறை சிப்காட்டில் டேங்கா் லாரியில் செவ்வாய்கிழமை அமில கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெருந்துறை சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகராட்சியில் இரவு நேரத்திலும் தூய்மைப் பணி

சத்தியமங்கலம் நகராட்சியில் இரவு நேரத்திலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுவதாக நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா். சத்தியமங்கலம் நகராட்சியில் பணியாளா்கள் ஒரே நேரத்தில் ஏற்படும் பணிச் சுமையை கு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் அச்சம்

பண்ணாரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள் பயணிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை இரவு நேரங்களில் தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இண... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபா்

சத்தியமங்கலம் அருகே மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் பொங்கியம்மாள் (66). கணவா் இறந்த நிலை... மேலும் பார்க்க