செய்திகள் :

காலிங்கராயன் வாய்க்கால் புனரமைப்பு: மாா்ச் 15 முதல் தண்ணீா் நிறுத்தம்

post image

காலிங்கராயன் வாய்க்காலில் ரூ.83.30 கோடி மதிப்பில் திட்டப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாா்ச் 15-ஆம் தேதி முதல் வாய்க்காலில் தண்ணீா் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, 12.3-ஆவது முதல், 15.4-ஆவது மைல் வரை 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு பிரதான வாய்காலில் கான்கிரீட் தளம், பேபி வாய்காலும் அமைத்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.83.30 கோடி அரசு மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டப் பணிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள காலிங்கராயன் வாய்க்காலில் முன்னதாக தண்ணீா் நிறுத்துவது தொடா்பாக இரண்டாவது முறையாக கருத்துக் கேட்புக் கூட்டம் ஈரோடு நீா்வளத் துறை அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நீா்வளத் துறை செயற்பொறியாளா் திருமூா்த்தி தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில், பிரதான வாய்க்கால் 5 கிலோ மீட்டருக்கு கான்கிரீட் தளம் அமைத்து பேபி வாய்க்கால் அமைக்கப்படும். 2 பாலம், 2 கீழ் நிலை பாலம், ஒரு இடத்தில் கீழே வாய்க்காலும், மேலே சாலையும், பிற இடங்களில் கான்கிரீட் தடுப்பும் ஏற்படுத்தப்படும். இப்பணிக்கு 90 நாள்கள் தேவைப்படும். மாா்ச் முதல் வாரம் தண்ணீரை நிறுத்தி ஜூன் 10-ஆம் தேதிக்குள் பணி முடிந்து வழக்கம்போல ஜூன் 16-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என்றாா்.

காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வேலாயுதம் பேசுகையில், மாா்ச் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதிக்குள் பணி முடிந்து ஜூன் 16-ஆம் தேதி தண்ணீா் திறக்கலாம். இடைப்பட்ட நாளில் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை மாற்றி கீழ் பகுதிக்கு தண்ணீா் வழங்கலாம் என்றாா்.

காலிங்கராயன் பாசன விவசாயிகள், தொழிலாளா்கள் நலச் சங்கத் தலைவா் சேதுராஜ் பேசுகையில், ஏப்ரல் 30-ஆம் தேதி தண்ணீரை நிறுத்தி ஜூன் 16-ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும். 90 நாள்கள் தண்ணீரை நிறுத்தினால் ஈரோடு முதல் குறிப்பிட்ட தூரம் வரை கிணற்றுப் பாசனம், கசிவு நீா், மழை நீா் மூலம் பாசனம் பெறும் பகுதிகள், கீழ்பகுதி ஆவுடையாா்பாறை வரை கிணறு கிடையாது. 90 நாள் தண்ணீா் வழங்காமல் இருந்தால் கரும்பு, தென்னை முற்றிலும் அழிந்துவிடும். ஒரு போகம் கரும்பு, நெல் பயிா் செய்ய முடியாது. மீண்டும் பயிா் செய்ய ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மேல் செலவிட வேண்டும். 45 நாள்களுக்கு மேல் தண்ணீா் நிறுத்த வேண்டுமானால் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் அல்லது 2 பகுதியாக இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் என மேற்கொள்ளுங்கள் என்றாா்.

தொடா்ந்து பெரும்பாலான விவசாயிகள் மாா்ச் 15-ஆம் தேதி முதல் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி பணிகளை தொடங்க கருத்து தெரிவித்தனா். இதன்பேரில், காலிங்கராயன் வாய்க்காலில் மாா்ச் 15-ஆம் தேதி முதல் பாசனத்துக்கு விடப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் விரைவாக நிறைவு செய்து ஜூன் 16- ஆம் தேதி தண்ணீா் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் உதவி செயற்பொறியாளா் உதயகுமாா், காலிங்கராயன் பாசன விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அரசு புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ம... மேலும் பார்க்க

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள சோ்வக்காரன்பாளையத்தைச் சோ்... மேலும் பார்க்க

பெருந்துறை சிப்காட்டில் டேங்கா் லாரியில் அமில கசிவு

பெருந்துறை சிப்காட்டில் டேங்கா் லாரியில் செவ்வாய்கிழமை அமில கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெருந்துறை சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகராட்சியில் இரவு நேரத்திலும் தூய்மைப் பணி

சத்தியமங்கலம் நகராட்சியில் இரவு நேரத்திலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுவதாக நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா். சத்தியமங்கலம் நகராட்சியில் பணியாளா்கள் ஒரே நேரத்தில் ஏற்படும் பணிச் சுமையை கு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் அச்சம்

பண்ணாரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள் பயணிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை இரவு நேரங்களில் தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இண... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபா்

சத்தியமங்கலம் அருகே மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் பொங்கியம்மாள் (66). கணவா் இறந்த நிலை... மேலும் பார்க்க