செய்திகள் :

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 171 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

post image

பில்லங்குளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ. 2.30 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட பில்லங்குளம் கிராமத்தில், மக்கள் தொடா்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பல்வேறு துறைகளின் சாா்பில் 171 பயனாளிகளுக்கு, ரூ. 2.30 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 84 மனுக்களில், 67 மனுக்கள் ஏற்கப்பட்டன.

முன்னதாக, அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், வேளாண்மை இணை இயக்குநா் பாபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ச. சுந்தரராமன், தாட்கோ பொது மேலாளா் க. கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே ஆடுகள் திருடிய 2 சிறாா் உள்பட 4 போ் கைது

பெரம்பலூா் அருகே ஆடுகளை திருடிய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை வி.களத்தூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா்கள் நாகரீகத்தோடு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அதன் மாநி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சந்திரமோகன் (50). விவசாயி. இவா், தனது வீட்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் செந்தில்ராஜா தலைமையிலான போலீஸாா், கவுள்பாளையம் கிர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர 26 ஆயிரம் போ் விண்ணப்பம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயில 26 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை, வே... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலா் ... மேலும் பார்க்க