செய்திகள் :

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினா் குறைகூறி நிறுத்த முயற்சிக்கின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

post image

தமிழக முதல்வா் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினா் ஏதாவது குறைகூறி நிறுத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

தஞ்சாவூா் சுற்றுலா மாளிகை அருகே புது ஆற்றங்கரையில் திமுக மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் தோ்தல் பிரசாரத்துக்காக அமைக்கப்பட்ட ‘அண்ணா அறிவகம்’ என்கிற செயல்பாட்டு அறையை தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை திறந்து வைத்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தது:

அதிமுகவின் சி.வி. சண்முகத்துக்கு அரசியல் தெளிவு பிறந்திருக்கும் என நம்புகிறேன். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா பெயரை போட்டு நிறைய திட்டங்களைச் செய்தனா். அதையும் அவா்கள் செய்யக்கூடாது என நினைக்கின்றனரா? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவா்களுக்கே துரோகம் செய்கிற கூட்டமாகத்தான் அந்தக் கூடாரம் திகழ்கிறது. அதில், சி.வி. சண்முகம் பிரதானமான உதாரணமாக இருப்பதாகத் தெரிகிறது. அதற்கு சரியான பதிலடியை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தமிழக முதல்வா் மக்கள் நலத்திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்தி வருவதைப் பாா்த்து பொறாமைப்படுகின்றனா். அதிமுகவினா் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் இந்த நாட்டுக்கும், மண்ணுக்கும் ஒன்றுமே செய்யவில்லை. அதையும் தாண்டி தற்போது செய்கிறவா்களையும் குறை சொல்லி நிறுத்தப் பாா்ப்பது மிகக் கேவலமான செயல். அதற்கு உச்ச நீதிமன்றம் சரியான நியாயத்தை வழங்கியுள்ளது என்றாா் அமைச்சா் ராஜா.

முன்னதாக அவா் கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் பேசுகையில், 2021 தோ்தலின்போது தமிழகத்தில் இரட்டை இலக்க தொழில்வளா்ச்சி என வாக்குறுதி அளித்த முதல்வா் ஸ்டாலின், அதனை 4 ஆண்டுகளிலேயே சாத்தித்துக் காட்டியுள்ளாா் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடந்தையில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மருத்துவ முகாம்

கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமைத் தொடக்கிவைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் கே. தசரதன் சிறப்புரையாற்றினாா்.... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில் எம். பக்தவச்சலனாா் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ‘சி... மேலும் பார்க்க

ஒரு ரூபாயில் இலவச நன்மை: பிஎஸ்என்எல் புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்காக ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பால சந்திரசேனா தெரிவித்திரு... மேலும் பார்க்க

பேராவூரணியில் விவசாய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் கண்காட்சி நடத்த தடை விதிக்கக் கோரி மனு

திருமண மண்டபங்களில் தற்காலிக கண்காட்சி நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூ... மேலும் பார்க்க

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் பட்டினத்தாா் குருபூஜை

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள பட்டினத்தாருக்கு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோயில் நுழைவு வாயிலில் பட்டினத்த... மேலும் பார்க்க