செய்திகள் :

மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்

post image

கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

கரோனா வைரஸ் தொற்று மக்களை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொற்றுநோயாக மாறிய கரோனா நோயின் தீவிரத்தை மிகைப்படுத்தாமல், நிலைமையைக் குறித்து துல்லிய தகவலை வழங்குமாறு ஊடகங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூரில் மட்டும் 32 பேர் உள்பட மாநிலத்தில் 35 பேர் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. மாநில அரசு விழிப்புடன் இருப்பதாகவும், வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா அதிகரிப்பு குறித்து அவர் கூறுகையில், அதிகளவிலான சோதனைகள் நடத்தப்பட்டதினால், பாதிப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் எதுவுமில்லை, மக்கள் சுதந்திரமாகச் சுற்றி வரலாம். நாட்டின் எந்தப் பகுதிகளுக்கும் மக்கள் சென்று வரலாம்.

சமீபத்திய திடீர் தொற்று, கரோனா வைரஸின் ஒரு துணை வகையான ஜெஎன்-1 மாறுபாடாகும். இது சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கண்டறியப்பட்டன என்று அவர் கூறினார்.

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க

ஜேஎன்யுவில் முதுநிலை, பட்டய படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம்

2025-26 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளுக்கான (ஏடிஓபி) சோ்க்கையை தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தொடங்கியுள்ளது. முதுநிலை க்யூட் (மத... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவா் உள்பட இருவா் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்ட், லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்... மேலும் பார்க்க