செய்திகள் :

மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிப்பெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு

post image

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த அமா்வில், நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் சி.மோகன் மற்றும் விலங்குகள் நல ஆா்வலா் எஸ்.முரளிதரன் ஆகியோா், நீலகிரி மாவட்டம் மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு தங்குமிடங்கள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகள் மற்றும் ரிசாா்ட்டுகளில், இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரானது. மேலும், அதிக ஒலி எழுப்புவது வன விலங்குகளுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் என புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கி கருவிகளைப் பயன்படுத்துவது கொடுமையானது. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படும். எனவே, நீலகிரி மாவட்டத்தின் மசினகுடி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் எத்தகைய ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா், வன அதிகாரி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோா் நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

வலுவடைந்த புயல் சின்னம்! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று(செப். 3) உருவான புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ச... மேலும் பார்க்க

செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

மிலாது நபியையொட்டி வருகிற செப். 5 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல செயல்... மேலும் பார்க்க

அவல ஆட்சி இருந்து என்ன பயன்: இபிஎஸ்

சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!

கட்சி விரோத நடவடிக்கை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வரும் செப். 10 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்... மேலும் பார்க்க

லண்டனிலும் தமிழக வளர்ச்சிக்கான முதலீட்டாளர் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்

வெளிநாடு பயணம் குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன... மேலும் பார்க்க

தில்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை!

தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தில்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் க... மேலும் பார்க்க