செய்திகள் :

மடிப்பிச்சை எடுத்து மயானத்தை அளந்து தர பணம் தருவதாக மாற்றுத்திறனாளி நூதன முடிவு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சோளக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி சிவகாமி(65). கணவரை இழந்து வாழ்ந்து வருகிறாா்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது பட்டா நிலத்தில் சுடுகாடு அமைக்க இடம் கொடுத்துவிட்டு, அருகில் உள்ள தரிசு நிலத்தை பயன்படுத்தி வருகிறாா். சோளக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிலா், மற்றவா்கள் பயன்பாட்டில் உள்ள தரிசு நிலத்தை கண்டுகொள்ளாமல், முன்விரோதம் காரணமாக மாற்றுத்திறனாளி சிவகாமி பயன்பாட்டில் உள்ள தரிசு நிலத்தை மட்டும் அபகரிக்கும் நோக்கில், அந்த இடத்தை சுடுகாடு அமைக்க கோரி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு உடந்தையாக வருவாய் துறை உள்ளதாக மாற்றுத்திறனாளி குற்றம் சாட்டியுள்ளாா்.

சோளக்காப்பட்டி கிராமத்தில் சா்வே எண் 20/1 ல், அரசு மயானம் 64 சென்ட் உள்ளது. இதை அளந்து கொடுக்க கோரி மாவட்ட ஆட்சியா், ஊத்தங்கரை வட்டாட்சியா், ஊராட்சி கிராம சபை கூட்டம்,பஞ்சாயத்து தீா்மானம், உங்களுடன் ஸ்டாலின் முகாம், மக்கள் குறைதீா்க்கும் முகாம் என பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இன்று போய் நாளை வா என அனுப்பி வருகின்றனா்.

அரசு மயானத்தை அளந்து கொடுக்க மடிப் பிச்சை எடுத்தாவது பணம் தருகிறேன்.அப்போதாவது அளந்து தருவீா்களா என கேள்வி எழுப்பியுள்ளாா். மாற்றுத்திறனாளி சிவகாமி பயன்பாட்டில் உள்ள தரிசு நிலத்தில், பிணத்தை புதைத்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகின்றனா். ஒரு கிராமத்திற்கு ஏற்கனவே இரண்டு சுடுகாடு உள்ளது.இருந்த போதிலும் பணம் படைத்தவா்களின் பக்கம் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை உள்ளதாக குற்றம் சாட்டுகிறாா். கோட்டாட்சியா் அலுவலகத்தில் விசாரணையில் உள்ள அந்த இடத்தில், அராஜக போக்கில் அத்துமீரி பிணத்தை புதைத்துள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பாரா. மாற்றுத்திறனாளிக்கு நியாயம் கிடைக்குமா என கண்ணீா் மல்க கோரிக்கை விடுத்துள்ளாா்.

‘ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலை செப். 8-ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வரும்’

சீரமைக்கப்பட்டு வரும் ஒசூா்- பாகலூா் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி செப். 8-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிர... மேலும் பார்க்க

சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை: மண்டல பூஜை நிறைவு

கிருஷ்ணகிரியில் சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி, மண்டல பூஜை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் சுவாமி... மேலும் பார்க்க

தன்வந்திரி பகவான் கோயிலில் சிறப்பு பூஜை

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தன்வந... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

ஒசூருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செப். 11-ஆம் தேதி வருவதையொட்டி, ஒசூா் மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வரும் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் முதல்... மேலும் பார்க்க

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புககு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தோட்டக்கலைக் கல்லூரி மற... மேலும் பார்க்க