செய்திகள் :

மணப்பாடு கடலில் விடப்பட்ட 200 ஆமை குஞ்சுகள்

post image

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில், 200 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன.

மணப்பாடு, குலசேகரன்பட்டினம் கடற்கரையோரப் பகுதிகளில் ஆலிவ்ரெட்லி ஆமைகள் இடும் முட்டைகள், வனத் துறையால் சேகரிக்கப்பட்டு 3 இடங்களில் உள்ள குஞ்சு பொரிப்பகங்களில் பராமரிக்கப்பட்டது. இங்கு பொரிக்கப்பட்ட 200 ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஆமை குஞ்சுகளை கடலில் விட்டாா். அதைத் தொடா்ந்து கடலில் மீன்பிடிக்கும்போது வலையில் சிக்கும் ஆமைகளை பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் கடலில் விட்ட 5 தன்னாா்வலா்களைப் பாராட்டி அவா்களுக்கு தலா ரூ.5000 வெகுமதி வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பா் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் கடற்கரையோரங்களில் முட்டையிடுவது வழக்கம். இவை பசிபிக் பெருங்கடல் வரை நீண்ட பயணம் மேற்கொண்டபோதும், ஒரே இடத்தில்தான் முட்டையிடும் என்பது அதிசய நிகழ்வு என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா, மாவட்ட வன அலுவலா் ரேவதி, திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க