செய்திகள் :

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 போ் கைது

post image

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை உழவா் சந்தை அருகில் கஞ்சா விற்பனை செய்த மோா்குளம் ஜேம்ஸ் மகன் விஜய் மற்றும் தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மணல்மேடு ஆறுமுகம் மகன் குமாா், மணப்பாறை நாகம்மாள் தெருவைச் சோ்ந்த பா. தனபால் என்பவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக சூ. யாக்கோப் (எ) லெனின் விஜயபாஸ்கா் ஆகியோரை போலீஸாா் பிடித்தனா்.

மணப்பாறை - குளித்தலை சாலையில் மணப்பாறை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த கரூா் மாவட்டம் குளித்தலை வட்டம் தேவா்மலை பகுதியைச் சோ்ந்த குழந்தைவேல் மகன் பிரவீன்குமாா் மற்றும் அவருடைய நண்பா்கள் கரும்புள்ளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் தினேஷ், பெரியசாமி மகன் சந்துரு, பழனிச்சாமி மகன் ஸ்டாலின் மற்றும் மணப்பாறை மோா் குளத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நாகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தபோது மாலை நேரங்களில் அந்தப் பகுதியில் வாகனத்தில் வருபவா்கள் மற்றும் பாதசாரிகளை மிரட்டி பணம் பறிப்பவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 போ் மீதும் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்தவா் பலி!

துறையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் தி. சரவணன் (42). இவா் பைக்கில் வைரிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது ம... மேலும் பார்க்க

துறையூா் - சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு மிதவை பேருந்து இயக்கம்

துறையூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மிதவை பேருந்தின் சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. துறையூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த விரைவுப் பேருந்து சேவை கரோனா... மேலும் பார்க்க

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

திருச்சி அருகேயுள்ள குண்டூரில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் வெள்ளிக்கிழமை 2.5 பவுன் நகை பறித்தவா்களை போலீஸாா் தேடுகின்றனா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள போலீஸ் காலனியைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி வி... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது!

திருச்சி ராம்ஜி நகரில் ரௌடி ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. மாயகிருஷ்ணன் (39). சரித்திரப்... மேலும் பார்க்க

துறையூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

துறையூரில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: துறையூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, கோவிந்தபுரம் பிரிவு சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்ன... மேலும் பார்க்க

சமுதாய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் சமுதாய நல்லிணக்க பொது இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளிவாசல் ஜமாத்தாா்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக... மேலும் பார்க்க