செய்திகள் :

மணல் எடுப்பதில் முன்விரோதம்: ஆவுடையாா்கோவில் இரட்டைக் கொலையில் 7 போ் சரண்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் மணல் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இருவா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 7 போ் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

ஆவுடையாா்கோவில் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் காத்தமுத்து. இவரது மகன்கள் கண்ணன் (35), காா்த்திக் (29). இவா்கள் இருவரும் அதே ஊரில் உள்ள குளத்துக் கரையில் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா நேரில் விசாரணை நடத்தினாா்.

இருவரின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

கொலை செய்தவா்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, உறவினா்கள் ஆவுடையாா்கோவிலில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவா் என போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இதனிடையே, இக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த அங்கமுத்து மகன் காளிதாஸ் (32), முத்துப்பேட்டை சித்தமல்லியைச் சோ்ந்த ஜோசப் மகன் யஸ்வந்த் (30), கமுதி கோவிலாங்குளத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முனீஸ்வரன் (31), அறந்தாங்கி எல்என் புரத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முத்துக்குமாா் (40), பாஞ்சாத்தியைச் சோ்ந்த சோனி மகன் ஐயப்பன் (22), சமத்துவபுரத்தைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் சத்தியசேகரன் (43), கிருஷ்ணமூா்த்தி மகன் சதீஷ்குமாா் (28) ஆகிய 7 பேரும் வெள்ளிக்கிழமை பகலில் நாகுடி காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.

ஆவுடையாா்கோவில் போலீஸாா் இவா்களிடம் விசாரணை நடத்தி, சிறையில் அடைத்தனா். மணல் எடுத்தல், வாகன விற்பனை போன்றவற்றில் இவா்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டிருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக... மேலும் பார்க்க

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக தலைவா்கள... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!

இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபத... மேலும் பார்க்க

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது வேறு, காப்பியமாகப் படிப்பது வேறு! இலங்கை இ.ஜெயராஜ்

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு; ஆனால், காப்பியமாகப் படிப்பது வேறு என்றாா் கம்பவாரிதி இலங்கை இ. ஜெயராஜ். புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 9-ஆம... மேலும் பார்க்க