பாலாற்றை மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை: முன்னாள் நீதிபதி சத்தியநாராய...
மணிப்பூரில் பதற்றம்: மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை!
புது தில்லி: மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அம்மாவட்டத்தில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியில் நடமாடலாம். ஆனால் 5 மணிக்கு மேல் காலை 5 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மேற்கண்ட அனைத்து ஊரடங்கு விதிகளும் கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.