செய்திகள் :

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

post image

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த மாநில எம்எல்ஏக்கள் 21 போ் கடிதம் எழுதியுள்ளனா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா், குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023, மே 3-ஆம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. இக்கலவரம் மற்றும் அதன் பிறகான மோதல் சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், முதல்வா் பதவியில் இருந்து அவா் கடந்த பிப்ரவரியில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 60 உறுப்பினா்கள் கொண்ட சட்டப் பேரவையும் முடக்கிவைக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜகவின் 13 எம்எல்ஏக்கள், தேசிய மக்கள் கட்சியின் 3 எம்எல்ஏக்கள், நாகா மக்கள் முன்னணியின் 3 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவா் என 21 எம்எல்ஏக்கள், பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

அதில், ‘மணிப்பூரில் பெரும் நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புடன் குடியரசுத் தலைவா் ஆட்சியை மக்கள் வரவேற்றனா். ஆனால், மூன்று மாதங்கள் ஆகியும் மாநிலத்தில் அமைதி-இயல்பு நிலையை மீட்டெடுக்கும் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் தென்படவில்லை. மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அமைதி-இயல்புநிலையை மீட்டெடுக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் நிறுவுவதுதான் ஒரே வழியாக இருக்கும் என கருதுகிறோம். பல்வேறு சமூக அமைப்புகளின் கோரிக்கையும் அதுவே’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு: ஆளுநா் ஆலோசனை

மணிப்பூா் கலவரத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை (மே 3) அனுசரிக்க மைதேயி மற்றும் குகி அமைப்புகள் முடிவு செய்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரிகளுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா புதன்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா்.

மாநிலத்தில் அமைதி-ஸ்திரத்தன்மையை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க