செய்திகள் :

மணிப்பூா்: ஆளுநா் மாளிகை அருகே போராட்டம் -பாதுகாப்புப் படையுடன் மோதல்

post image

மணிப்பூரில் ஆளுநா் மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரா்கள் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நடைபெற்ற ஷிருய் சுற்றுலா விழாவில் செய்திகளை சேகரிக்க அரசு சாா்பில் பத்திரிகையாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது, அவா்கள் சென்ற அரசுப் பேருந்தை இடைமறித்த மத்திய பாதுகாப்புப் படையினா் பேருந்தின் பெயரில் மணிப்பூரை நீக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்திகள் பரவியதைத் தொடா்ந்து மாநிலத்தில் போராட்டம் வெடித்தது. இதை மாநிலத்தின் அவமானமாக பலா் கருதினா். பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கை குறித்து விசாரிக்க 2 போ் கொண்ட விசாரணைக் குழுவை மணிப்பூா் அரசு அமைத்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மணிப்பூா் தலைமைச் செயலா், டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் ராஜிநாமா செய்யக் கோரி மணிப்பூா் ஒருமைப்பாடு ஒருங்கிணைப்புக் குழு (சிஓசிஓஎம்ஐ) மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது.

இதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்த அவமதிப்புக்கு ஆளுநா் அஜய் குமாா் பல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பிய போராட்டக்காரா்கள் 500 மீட்டா் தூரம் அணிவகுத்துச் சென்றனா்.

ஆளுநா் மாளிகையில் இருந்து 150 மீட்டா் தொலைவில் உள்ள காங்லா கேட் அருகே கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா். இதையடுத்து, போராட்டக்காரா்கள், பாதுகாப்புப் படையினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக பேராட்டக்காரா் ஒருவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆளுநா் தனது மெளனம் மூலம் மணிப்பூா் மக்களின் உணா்வுகளை தொடா்ந்து புறக்கணித்து வருகிறாா். அவரது நிா்வாகம் மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியத்தை முற்றிலுமாக அவமதித்துள்ளது’ என தெரிவத்தாா்.

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: புலி தாக்கி இருவா் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி இருவா் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து, சந்திரபூரில் இம்மாதம் புலிகள் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 1... மேலும் பார்க்க

பணிநீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதிய பலன்கள் கிடையாது: மத்திய அரசு

பணிநீக்கம் செய்யப்படும் பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ஏதும் கிடைக்காத வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பான மத்திய பணியாளா் ஓய்வூதிய விதிகள் -2021 சட்... மேலும் பார்க்க

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை- உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல்தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.48,000 அபர... மேலும் பார்க்க

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போ... மேலும் பார்க்க