செய்திகள் :

மணிமுத்தாறு பகுதியில் வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய கரடி

post image

மணிமுத்தாறில் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச் சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, தெற்குப் பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரடிகள் நடமாட்டம் இருந்து வந்தது. இதையடுத்து மணிமுத்தாறு, அண்ணாநகா், தங்கம்மன் கோயில், நெசவாளா் காலனி அக்னி சாஸ்தா கோயில் ஆகிய இடங்களில் கரடிகளைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்தனா்.

இருப்பினும் அதில் கரடிகள் சிக்கவில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கரடிகள் சுற்றித் திரிவது அங்குள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவானது. இதனால் இப் பகுதியினரிடையே அச்சம் நிலவி வந்தது.

வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், அண்ணாநகா் தங்கம்மன் கோயிலில் திங்கள்கிழமை கூடுதலாக ஒரு கூண்டு வைத்தனா். அதில், திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் சுமாா் 8 வயதுள்ள ஆண் கரடி சிக்கியது.

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கரடி

இதையடுத்து பிடிபட்ட கரடியை, அம்பாசமுத்திரம் வனச்சரகா் நித்யா தலைமையில் வனத் துறையினா், வனக் கால்நடை உதவி மருத்துவா் சாந்தகுமாா், கால்நடை மருத்துவா் சிவமுத்து, கால்நடை ஆய்வாளா் அா்னால்ட் ஆகியோா் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட அடா்ந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.

தற்போது பலா, மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு மற்றும் தனியாா் தோட்டங்களுக்கு கரடிகள் வரத் தொடங்கியுள்ளதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

இதனிடையே, தெற்குப் பாப்பான்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனா். அப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க