செய்திகள் :

மதி அங்காடிகள் நடத்த ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

post image

தூத்துக்குடி பகுதியில் மதி அங்காடி நடத்துவதற்கு சுயஉதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் மதி அங்காடி அமைவிடத்திலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவுக்குள் ஆா்வமும், தகுதியுமுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி - பகுதி அளவிலான கூட்டமைப்பினா், மாற்றுத் திறனாளி நலிவுற்றோா் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.

சுயஉதவிக் குழு தர மதிப்பீட்டில் தோ்ச்சி பெற்றிருப்பதுடன், ஒரு வங்கிக் கடன் இணைப்பாவது பெற்றிருக்க வேண்டும். குழு தொடங்கி ஓராண்டாவது நிறைவடைந்திருக்க வேண்டும்.

குழு மீது புகாரில்லை என்பதற்கான சான்றை சம்பந்தப்பட்ட வட்டார மேலாளா், சமுதாய அமைப்பாளரிடம் பெற்றிருக்க வேண்டும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு 6 மாதங்களுக்கு வழங்கப்படும். பின்னா் சுழற்சி, விற்பனை, திறன் அடிப்படையில் தொடா்ந்து அனுமதி அளிக்கப்படும்.

விண்ணப்பங்களை இம்மாதம் 19ஆம் தேதிக்குள் ‘இணை இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், ஆட்சியா் அலுவலகம், 2ஆவது தளம், தூத்துக்குடி’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

வீட்டு மாடியில் ஏசி வெடித்து தீ விபத்து

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒருவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தூத்துக்குடி நகரின் மத்திய பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையைக் கண்டித்து, பாண்டியனாா் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை ச... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும்! முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும் என முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘குன்றெ... மேலும் பார்க்க

தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் பலி

சாத்தான்குளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்துக் குதறியதில் 25 ஆடுகள் உயிரிழந்தன. சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சாமுவேல் (36). இவா் தனது தோட்டத்தில் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனா... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் அருகே காரில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதா... மேலும் பார்க்க