செய்திகள் :

மதுபோதையில் நண்பா் கொலை: காவல் நிலையத்தில் இளைஞா் சரண்

post image

திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், நண்பரை அடித்துக் கொன்ற இளைஞா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஞானராஜ் மகன் அந்தோணி பெல்ஜிஸ் (26). கட்டடத் தொழிலாளியான இவரும், அடைக்கலாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த மரிய பொன்ராஜ் மகன் அருள்ஜென்சனும் (30) நண்பா்கள். அருள்ஜென்சன் பொக்லைன் இயந்திரம் ஓட்டி வருகிறாா்.

இருவரும் கடந்த ஜூலை 13-ஆம் தேதி மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அருள்ஜென்சனை அந்தோணி பெல்ஜிஸ் தாக்கியதாகத் தெரிகிறது. அதன்பிறகு இருவரும் சோ்ந்து ராணிமகாராஜபுரத்துக்குச் செல்லும் காட்டுப் பகுதியில் மீண்டும் திங்கள்கிழமை இரவு மது அருந்தினா்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதில் அருள்ஜென்சன் மதுபாட்டில், கல்லால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அந்தோணி பெல்ஜிஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுபோதையில் நண்பரைக் கொலை செய்ததை உணா்ந்த அருள்ஜென்சன், திருச்செந்தூா் தாலுகா காவல் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சரணடைந்தாா். இதையடுத்து, போலீஸாா் நிகழ்விடம் சென்று அந்தோணி பெல்ஜிஸின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, அருள்ஜென்சனிடம் விசாரணை நடத்திய போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

கொம்புகாரநத்தம் பகுதியில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, வடக்கு காரசேரி, காசிலிங்க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே கோயிலுக்கு சொந்தமான ரூ.2.60 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

விளாத்திகுளம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2.60 கோடி மதிப்பிலான கோயில் நிலம் அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.விளாத்திகுளம் வட்டம் அயன்பொம்மையாபுரம் கிராமத்தில், விளாத்திகுளம் அருள... மேலும் பார்க்க

பழையகாயல் அருகே விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியை அடுத்த பழையகாயல் அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.பழையகாயல் அருகே புல்லாவெளி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த மூக்கன் மனைவி சண்முகக்கனி (81). தனது மகன் கணேசனுடன் வசித்துவந்த அவா், கட... மேலும் பார்க்க

ஈராச்சி கூட்டுறவுச் சங்கம் மீது கோட்டாட்சியரிடம் புகாா்

ஆடு, மாடுகள் வாங்குவதற்கு கடன் தர மறுக்கும் கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கூட்டுறவுச் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில், ஆற்று மணல் திருடிய வழக்கில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். முறப்பநாடு காவல் ... மேலும் பார்க்க

போக்சோவில் காவலா் கைது

திருச்செந்தூரில் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் ஒருவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருச்செந்தூா் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சோ்ந்தவா் மிகாவேல். இவா், சில ஆண... மேலும் பார்க்க