செய்திகள் :

மதுப் புட்டிகள் விற்பனை: இருவா் கைது

post image

சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அண்ணாநகா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு நின்றிருந்த சத்திரப்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் (60) என்பவரை சோதனை செய்தனா். இவரிடமிருந்து, விற்பனைக்காக வைத்திருந்த 28 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

இதேபோல, ரயில்வே பீடா் சாலையில் மாரிமுத்து (43) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா் தனது வீட்டில் மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 28 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்து, மாரிமுத்துவைக் கைது செய்தனா்.

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசுத் தொழிலாளி முத்துக்குமா... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்திலுள்ள த... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டல்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே. கே. எஸ். எஸ்.ஆா். ராமச்சந்திரன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மை... மேலும் பார்க்க

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல... மேலும் பார்க்க