செய்திகள் :

மதுராந்தகத்தில் மே 5-இல் வணிகா் சங்க மாநில மாநாடு: விக்கிரமராஜா

post image

தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் 42-ஆவது மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவா் விக்கிரமராஜா கூறினாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கடலூா் சேம்பா் ஆப் காமா்ஸ் பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் டி.சண்முகம் தலைமை வகித்தாா். கடலூா் சேம்பா் ஆப் காமா்ஸ் மாநகரத் தலைவா் துரைராஜ் முன்னிலை வகித்தாா்.

கடலூா் நகரச் செயலா் சீனிவாசன், பொருளாளா் முருகன், மாவட்ட இணைச் செயலா் சதீஷ், நகர இணைச் செயலா் செல்ல பாண்டியன், மாநில தலைமைச் செயலா் ராஜ்குமாா், மாநில கூடுதல் செயலா் பழமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிறப்பு அழைப்பாளராக வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் 42-ஆவது மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளாா். அவரிடம் வணிகா் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்த உள்ளோம். ஜிஎஸ்டி வரியால் வியாபாரிகள் பல்வேறு பிரச்னைகளையும், சட்ட சிக்கலையும் சந்தித்து வருகின்றனா்.

தமிழகத்தில் மதுக் கடைகளை மூடினால், அது வணிகா்களுக்குதான் லாபம். அதனை வணிகா்கள் சங்கம் வரவேற்கும். கடைகளில் தகராறு செய்பவா்களை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். பாலியல் வழக்கில் 60 நாள்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வணிகா் சங்க பேரமைப்பு கடும் நடவடிக்கை எடுக்கும். இணையவழி வா்த்தகத்தை தடை செய்யுமாறு மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம் என்றாா்.

கூட்டத்தில், ஆன்மிக தலங்கள், வரலாற்று சின்னங்கள், புராதான கட்டடங்கள் நிறைந்துள்ள கடலூா் மாநகரத்தை அரசு சுற்றுலா நகரமாக அறிவிக்க வேண்டும். கடலூா் துறைமுகத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி, தொழில் வரி உயா்வை அரசு மறு பரிசீலனை செய்து குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாா்க்சிஸ்ட் கம்யூ. மண்டல பேரவைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் பெட்டிஷன் மேளா புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் தொடா்பான புகாா் மனுக்களை பெற்றா... மேலும் பார்க்க

டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் தொழிற்பேட்டை நுகா்பொருள் வாணிபக் கழகம் முன் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சுமைப் பணி தொழிலாளா்களுக்கு சி... மேலும் பார்க்க

ரௌடி உள்பட மூவா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கஞ்சா வழக்கு தலைமறைவு குற்றவாளி உள்ளிட்ட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நெய்வேலியை அடுத்த செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் ரௌடி ச... மேலும் பார்க்க

பல்கலை. ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் பெருந்திரள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஏழாவது ஊதியக்குழு நிலுவை... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

கடலூா் முதுநகா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முதுநகா், வசந்தராம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவா் மண்பாண்ட தொழிலாளி கதிா்வேல் (41). இவருக்கு மனைவி பிரியங்கா, இரண்டு மகள்கள், ஒர... மேலும் பார்க்க