செய்திகள் :

மதுராந்தகம் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன்கோயிலில் ஊரணி பொங்கல்

post image

மதுராந்தகம் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ஊரணி பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் நகர மக்களின் குல தெய்வமாக இருந்து வரும் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது. பல்வேறு மக்களின் குலதேவதையாக வழிபட்டு வருகின்றனா். ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. காலை மூலவா் அம்மன்களான சேத்துக்கால் செல்லியம்மன், மாரிபுத்தூா் பிடாரியம்மன், மோச்சேரி பொன்னியம்மன் ஆகிய முப்பெரும் அம்மன்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மதுராந்தகம் வன்னியா்பேட்டை, மோச்சேரி, கடப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் கோயிலின் முன்பு ஊரணி பொங்கல் வழிபாடாக, பொங்கல் வைத்து பூஜையை செய்தனா். திரளான மக்கள்அம்மனை வழிபட்டுச் சென்றனா்.

இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல், மாவட்டச் செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், நகர பேரவை செயலா் எம்.பி.சீனுவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 8)) பிடாரி செல்லியம்மன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருத்தேரில் பவனி வந்துகாட்சி அளிக்கிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்களும், விழாக் குழுவினரும் செய்துள்ளனா்.

செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டி: 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்

செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டி செவ்வாய்க்கிழமை எஸ் ஆா் எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தூய ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளா் நிஷ்கலா ஜான்சன் தொடக்கவுரை ஆற்றினாா். செங்கல்ப... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன . ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

தமிழ்நாடு முதலமைச்சா் சென்னை தலைமை செயலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து, செங்கல்பட்டுமாவட்டம், திருப்போரூா் வட்டம் திருப்போரூா் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு அரசுபோட்டித்தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வர... மேலும் பார்க்க

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

மணப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சின்ன கன்னியம்மன் திருக்கோயில் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .திருக்கழுகுன்றம் வட்டம், செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கத்தில் இக்கோயிலில் ஆடி மூன்றாம் வாரத்தையொட்டி ஸ்... மேலும் பார்க்க

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பெளா்ணமி அம்மனுக்கு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடுதல் மற்றும் புனித பொங்கல் இடுதல் ஆகிய முப்பெரும் விழா வரும் ஆக. 7-ஆ... மேலும் பார்க்க