`அபராதம் செலுத்தும் தவறுக்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதா?'- சவுக்கு சங்கர் காட...
மதுரா மாதாபுரம் கிராமத்தில் மே 30-இல் ஜல்லிக்கட்டு
அரியலூா் மாவட்டம், ஏறவாங்குடி மதுரா மாதாபுரம் கிராமத்தில் மே 30 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் மே 24 மாலை 5 மணிக்குள் பதிய வேண்டும்.
இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளின் உரிமையாளா்களும், மாடுபிடி வீரா்களும் இணையதளம் மூலம் மே 23 மற்றும் 24 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
இந்த பதிவு ஒரு ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே பொருந்தும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளா் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பதிவு செய்தவா்களின் சான்றுகள் சரிபாா்க்கப்பட்ட பின் தகுதியான நபா்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.