செய்திகள் :

மதுரையில் சாலையோர வியாபாரிகள் சங்க முதல் மாநில மாநாட்டை நடத்த முடிவு

post image

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிஐடியு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ். செல்வி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி. கருப்பையன் சிறப்புரையாற்றினாா். சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் எஸ். ரெங்கராஜன், சிஐடியு மாநில துணைத் தலைவா் ஆா். தெய்வராஜ் பேசினாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க முதல் மாநில மாநாட்டை வரும் அக்டோபா் 24, 25 ஆம் தேதிகளில் மதுரையில் நடத்துவது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 80 தரைக்கடை வியாபாரிகளுக்கு பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் உரிய இடம் ஒதுக்கித் தர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு சட்டத்துக்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதைக் கைவிட வேண்டும். நகர விற்பனைக் குழுவை அனைத்து நகராட்சிகளிலும் உடனே ஏற்படுத்த வேண்டும். நகர விற்பனைக் குழு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் சந்தியாகு, செல்வம், மோகன், கணேசன், பிச்சைமுத்து, விஜயலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனின் டோவா் பகுதிக்கு... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்: நி... மேலும் பார்க்க

பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா ... மேலும் பார்க்க

ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க