செய்திகள் :

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்

post image

மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலா் எம். அா்ச்சுணன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த சட்டப் பேரவை தோ்தலின்போது திமுக தனது தோ்தல் அறிக்கையில் 28-ஆவது வாக்குறுதியாக மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டு தொடங்கிவிட்டது. இதனிடையே மதுரையில் வருகிற 1- ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறுகிறது. அப்போது மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க யானைமலை அடிவாரத்தில் உள்ள ஒத்தக்கடையில் தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி வளாகத்தில் தென் தமிழகம் பயன்பெறும் வகையில் ‘தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டுமென காவேரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

மேலும் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ .100 கோடி நிதியும் ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.

தூத்துக்குடி- சென்னைக்கு காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல்நேர ரயில் விட வலியுறுத்தல்

காரைக்குடி, திருவாரூா் வழியாக தூத்துக்குடி - சென்னை இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த தகராறு: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியதாக ரீல்ஸ் எடுத்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 4 போ் கைது செய்யப்பட்டனா். சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் வெ... மேலும் பார்க்க

தேவகோட்டை நகராட்சிக் கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி வியாபாரிகள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து தேவகோட்டை நகா், பேருந்து ந... மேலும் பார்க்க

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க