செய்திகள் :

மதுரை: வரதட்சணை கேட்டு மனைவிக்குக் கொடூர சித்திரவதை; தலைமறைவான போலீஸ் கணவன் கைது

post image

கூடுதலாக வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடூரமாகச் சித்திரவதை செய்த மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

கைது
கைது

தனியார்ப் பள்ளி ஆசிரியையான தங்கபிரியாவுக்கும், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார்.

கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, கணவரின் தங்கை அனிதா ஆகியோர் தங்கபிரியாவைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

60 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைப் பொருட்கள் திருமணத்தின்போது கொடுக்கப்பட்டது. வீடு கட்டுவதற்குப் பல லட்சம் பணமும், நகையும் கூடுதலாக வேண்டும் எனத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

கொடுமை தாங்காமல் இடையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற தங்கபிரியாவைச் சமாதானம் பேசி பூபாலன் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தங்கபிரியாவைத் தினமும் கடுமையாகச் சித்திரவதை செய்து வந்த பூபாலன், சில நாட்களுக்கு முன் போலீஸ் கஸ்டடியில் கைதிகளைச் சித்திரவதை செய்வதைப்போல் தங்கபிரியாவின் முகத்தை நகத்தால் பிராண்டி, கால், கை மூட்டுகளை உடைத்து, குரல்வளையை நெறித்து சித்திரவதை செய்ததோடு, இந்தக் கொடுமையைத் தன் சகோதரிக்கு போனில் மகிழ்ச்சியாக விவரித்துள்ளார்.

அந்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்திரவதையால் பலத்த காயமடைந்த தங்கபிரியா, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பூபாலன்
பூபாலன்

இந்தச் சம்பவம் குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அப்பன் திருப்பதி காவல்துறையினர், தனிப்படை அமைத்து பூபாலன் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினரைத் தேடி வந்த நிலையில், திருப்பூரில் மறைந்திருந்த பூபாலனைக் கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தக் கொடுமைக்கு உடந்தையாக இருந்த பூபாலனின் தந்தையும் இன்ஸ்பெக்டருமான செந்தில்குமரன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அறுவை சிகிச்சையால் படுக்கையில் ஆதீனம்; விசாரணைக்கு வந்த போலீஸ்; குவிந்த பாஜகவினர்; நடந்தது என்ன?

உளுந்தூர்பேட்டை கார் விபத்து தொடர்பாக உடல் நலமில்லாமல் படுக்கையில் இருந்த மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணைகடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடை... மேலும் பார்க்க

மும்பை: சிறுவன் மீது நாயை ஏவிக் கடிக்கவிட்டுச் சிரித்த நபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மும்பை மான்கூர்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றில் ஹம்சா (11) என்ற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அந்நேரம் மொகமத் சொஹைல் ஹசன் என்பவர் கொண்டு வந்த வளர்ப்பு நாய் ஆட்டோவில் ஏறியது.... மேலும் பார்க்க

டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடுத்த இன்ஸ்டா சாட்டிங்

டெல்லி உத்தம்நகரில் வசித்தவர் கரண் தேவ் (36). இவரது மனைவி சுஷ்மிதா. கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக எலக்ட்ரிக் ஷாக் பட்டுவிட்டதாகக் கூறி கரண் தேவை அவரது மனைவியும், உறவினர்களும் அங்குள்ள ராணி ரூப்ராணி மரு... மேலும் பார்க்க

``என் மரணத்துக்கு காரணம்..'' - நொய்டா பல்கலை. மாணவி கடிதம்; பேராசிரியர்கள் கைது.. என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் சார்தா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி ஜோதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பழகி, லிவ் இன் உறவில் இருந்த பெண் போலீஸை கொன்ற CRPF வீரர்.. என்ன நடந்தது?

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள அஞ்சார் போலீஸ் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அருணாபென். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் திலீப் என்பவ... மேலும் பார்க்க

சிகிச்சையில் இருந்த மனைவியை மருத்துவமனைக்குள் புகுந்து குத்தி கொன்ற கணவர்; குளித்தலையில் கொடூரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ரூத். இவர், ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் ஸ்ருதி (வயது: 27) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள... மேலும் பார்க்க