ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் கமல்; "தாமதமான அங்கீகாரமே..." - முதல்வர் ஸ்...
மத்திகோடு ஊராட்சியில் தெருவிளக்குகளை சீா்செய்ய கோரிக்கை
மத்திகோடு ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை சீா்செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மத்திகோடு ஊராட்சியில்
11 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள பிரதான சாலை சந்திப்பு பகுதிகளான மத்திகோடு அரசு மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம், கருக்குப்பனை ஆகிய பகுதிகளிலும், புளியம்மூடு, மத்திகோடு பாலம், ஏழுவாா்குழிவிளை, அம்பலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் நீண்டநாள்களாக எரியவில்லை.
இதனால், இப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் வெளியே சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, எரியாத தெருவிளக்குகளை சீா்செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திகோடு ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.