செய்திகள் :

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்! 8-வது ஊதியக் குழுவில் உயரும் சம்பளம்!

post image

மத்திய அரசு அமல்படுத்தவுள்ள 8-வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு கணிசமான அளவில் சம்பளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக நமது நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. அந்த வகையில் நாட்டின் முதல் ஊதியக்குழு 1946 ஆம் ஆண்டிலும், தற்போதுள்ள 7-வது ஊதியக் குழு கடந்த 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பதவிக் காலம் வரும் 2026-இல் முடிவடைய உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியா்களின் ஊதியம், ஓய்வூதியதாரா்களுக்கான படிகளை மாற்றியமைப்பதற்காக 8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2026-2027 ஆம் ஆண்டுக்கான 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களில் சம்பளம் மாதத்திற்கு ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை உயரும் எனத் தெரியவந்திருப்பது ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வேலை நிரந்தரம் என்பதே முக்கிய காரணமாக இருந்தாலும், அந்தப் பணியில் இருக்கும் சலுகைகளும் அதிகமாகவே இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு முறை மாற்றப்படும் ஊதியக் குழுவில் அடுத்தாண்டு மாற்றியமைக்கப்படும் ஊதியக் குழுவால் மத்திய அரசு ஊழியர் அதிகரிக்கும் சம்பள உயர்வு அரசு ஊழியர்கள் மத்தியில் தற்போது மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

8-வது ஊதியக் குழுவில் ஒருவருக்கு சராசரியாக 14-19 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு இருக்கும் என்று கணக்கு வைத்துக் கொண்டால், சுமார் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிவரும் ஊழியருக்கு மாதத்திற்கு ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை அதிகமாக ஊதியம் கிடைக்கும்.

2026 - 2027 ஆம் ஆண்டுக்கான ஊதியக் குழு வருகிற ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்படும் என்றும், இது அடுத்தாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்தத் தனியார் நிதிச் சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள சாத்தியக் கூறுகளின் படி மூன்று விதமாக ஊதிய உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

எவ்வளவு உயரும்?

8-வது ஊதியக் குழுவிற்கு ரூ.1.75 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தால், ஊழியர்களுக்கு 50-50 சதவிகிதம் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் உயரும். இதனால், மாதச் சம்பளம் ரூ.14,600 வரை உயரும். ஒருவேளை மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தால், மாதச் சம்பளம் ரூ.16,700 வரை உயரும். அப்படி இல்லாமல் மத்திய அரசு ரூ.2.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தால், மாதச் சம்பளம் ரூ.18,800 வரை உயரும் என்றும் அந்த தனியார் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களில் சம்பளம் சராசரியாக ரூ.1 லட்சமாக இருக்கிறது. இந்த ஊதிய உயர்வின் மூலம் 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் 7-வது ஊதியக்குழுவிற்கு ரூ.1.02 லட்சம் கோடி செலவிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2.57 மடங்கு ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 2.57 மடங்கு ஊதிய உயர்வு இருந்தால் அவர்களில் சம்பளம் 157 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் தற்போது ரூ.18,000 சம்பளம் வாங்கி வந்தால், அவருக்கு ரூ.46,260 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் சம்பளமாக ரூ.9,000 வாங்கி வந்தால் அவருக்கு ரூ.23,130 வரை கிடைக்கும். ஒருவேளை 1.92 மடங்கு ஊதிய உயர்வு இருந்தால், ரூ.18000 லிருந்து ரூ.34,560 ஆக உயரும். இது 92 சதவிகித ஊதிய உயர்வாகும்.

7-வது ஊதியக்குழுவின் போது அனைவருக்கும் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இது 157 சதவிகிதம் அதிகமாகும். இதனால், குறைந்தபட்சம் ஊதியம் ரூ. 7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முதலீட்டில் செயல் நுண்ணறிவு: இளம் தலைமுறையினர் அபாரம்!

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க