செய்திகள் :

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

post image

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' மற்றும் 'டி' தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.: F.No. E/16/2025-C-2

தேர்வின் பெயர்: SSC-Stenographer Grade 'C' and 'D' Exam - 2025

காலியிடங்கள்: 261

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குரூப் 'டி' பிரிவிற்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், குரூப் 'சி' பிரிவிற்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிப்பதுடன் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: விண்ணப்பத்தாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம், 50 கிலோ எடையும், மார்பளவு சாதாரண நிலையில் குறைந்தது 75 செ.மீ அகலமும், 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதிற்குள்ளும், குரூப் 'டி' பணிகளுக்கு 18 முதல் 27 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி நடத்தும் ஆன்லைன் சுருக்கெழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சுருக்கெழுத்து எழுத்தும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள்: 6.8.2025 - 11.8.2025

தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர்.

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் , சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெறத் தேவையான தகுதிகள் போன்ற விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், இடம் போன்ற விவரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.6.2025

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை வேண்டுமா?

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள மென்பொருள் பொறியாளர் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா-வில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) 4,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வ... மேலும் பார்க்க

2,299 கிராம உதவியாளா்கள் காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழ்நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளா் காலியிடங்களை நிரப்பும் நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் நிா... மேலும் பார்க்க

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty Resource Personகாலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.80,000... மேலும் பார்க்க

சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை வேண்டுமா?

சென்னையில் உள்ள சென்னை துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Pilot(Contract basis)காலியிடங்கள்: 2சம்பளம்: பயிற்சி விமானி (பய... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா?

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியரல்லாத குரூப் 'ஏ', 'பி' மற்றும் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வர... மேலும் பார்க்க