தமிழா்களுக்காக ஒதுக்கப்பட்ட நரேலா பகுதி குடியிருப்புகளின் நிலை என்ன?
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பால் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவு!
மும்பை: ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குண்டு வீசித் தாக்கியதையடுத்து, மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் உள்ளூரில் பங்குச் சந்தை அளவுகோல் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 931.41 புள்ளிகள் சரிந்து 81,476.76 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 511.38 புள்ளிகள் சரிந்து 81,896.79 புள்ளிகளாகவும் அதே வேளையில் நிஃப்டி 140.50 புள்ளிகள் சரிந்து 24,971.90 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை, இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுவதற்கு இரண்டு வார கால அவகாசம் அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பதட்டங்கள் தணியும் என்ற எதிர்பார்ப்பில் சந்தைகள் உயர்ந்தன.
இருப்பினும், 2பி2 பாம்பர் ரக விமானங்கள் பயன்படுத்தி ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதால் அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்த தாக்குதல் வெகுவாக வழிவகுத்தது.
சென்செக்ஸில் எச்.சி.எல். டெக், இன்ஃபோசிஸ், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் மாருதி ஆகியவை சரிந்த நிலையில் இதற்கு நேர்மாறாக டிரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தன.
நிஃப்டி-யில் டிரென்ட், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்தும் இன்ஃபோசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
துறை ரீதியாக ஐடி, எஃப்எம்சிஜி, ஆட்டோ, வங்கி, தொலைத்தொடர்பு ஆகியவை 0.3 முதல் 1.5 சதவிகிதம் சரிந்தன. அதே நேரத்தில் நுகர்வோர் சாதனங்கள், ஊடகம், உலோகம், மூலதனப் பொருட்கள் ஆகியவை 0.3 முதல் 4 சதவிகிதம் உயர்ந்தன.
மதுசூதன் பங்குகளை கையகப்படுத்தப்பட்டதை அடுத்து நார்தர்ன் ஆர்க் கேபிடல் பங்குகள் 8% உயர்ந்தன. ஆர்டர்கள் குவிப்பால் பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் புதிய உச்சத்தை எட்டின. வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சிகளில் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் 11 சதவிகிதம் உயர்ந்தன.
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், பூனவல்லா ஃபின்கார்ப், நாராயண ஹ்ருதயாலயா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எம்சிஎக்ஸ் இந்தியா, ஆதித்யா பிர்லா கேபிடல், ஆதம் இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட 100 பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை பதிவு செய்தது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிந்த நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் குறிப்பாக மத்திய நேர வர்த்தகத்தில் சரிந்து வர்த்தகமாயின.
அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.49 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $77.39 ஆக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) வர்த்தகத்தில் ரூ.7,940.70 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: ஜியோ பேமன்ட்ஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்திய ஜேஎஃப்எஸ்எல்