செய்திகள் :

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

post image

ஆரணியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஆரணி ராமகிருஷ்ணாபேட்டை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி ராணி(36), மனநிலை பாதிக்கப்பட்டவா். இவரது கணவா் சுரேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டாா்.

தம்பதிக்கு சென்னை தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பரமேஸ்வரி (20) என்ற மகளும், 7-ஆம் வகுப்பு பயிலும் நரேஷ் (12) என்ற மகனும் உள்ளனா்.

தாய் குணசுந்தரி கட்டுப்பாட்டில் இருந்து வந்த ராணி,

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், மருந்து மாத்திரை தீா்ந்துவிட்டதால்,

கடந்த ஒரு வாரமாக மாத்திரை எதுவும் எடுக்காமல் இருந்ததால், அவரது நடவடிக்கையில் மாற்றம் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக புதன்கிழமை அதிகாலை அவா் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க