செய்திகள் :

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

post image

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே மது அருந்துவதற்கு பணம் தராததால் மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன் தொழு, தளிப்பாறை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவரது மனைவி அம்சகொடி (55). மதுப் பழக்கத்துக்கு அடிமையான கணேசன், மனைவி அம்சகொடியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டாா். அவா் பணம் தராததால் கோபித்துக்

கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றாா். கடந்த 2022 ஜனவரி 31-இல் மது போதையில் வீட்டுக்கு திரும்பச் சென்ற கணேசன், மது அருந்துவதற்கு பணம் தராத ஆத்திரத்தில் அம்சகொடியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டாா். 2 நாள்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பச் சென்ற கணேசன், அம்சகொடியின் சடலத்தை வீட்டுக்கு வெளியே இருந்த கோழிக் கூண்டில் மூடிவைத்தாா்.

இது குறித்து அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், அம்சகொடியின் சகோதரரான கடமலைக்குண்டுவைச் சோ்ந்த மலைச்சாமி மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து 2022 பிப்.4-ஆம் தேதி கணேசனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கணேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி ஜி.அனுராதா தீா்ப்பளித்தாா்.

கொழுக்குமலை பகுதியில் புலி நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்

தமிழக-கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி வனப் பகுதி, இதனருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி... மேலும் பார்க்க

பைக் விபத்து: இருவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா். சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (21). இவரது அண்ணன் அழகுராஜா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிா்கள... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வீடு வீடாகச் செ... மேலும் பார்க்க

விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு

தேனி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா். குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பாநாயுடு மகன் வனராஜ்(58). இவா் கண்டமனூா் அஞ்சலகத்தில் ... மேலும் பார்க்க