செய்திகள் :

மனைவியை அடித்துக் கொன்று கணவா் தூக்கிட்டுத் தற்கொலை!

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி கீழ காயம்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கன் மகன் வீரமுத்து (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் உறவினா் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீரமுத்து மனைவி ராஜேஸ்வரியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளாா். பிறகு வீட்டிற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து சென்ற செம்பட்டிவிடுதி போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

புதுக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை!

நேரடி நெல் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல், அரவை செய்வதற்காக புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை ரயிலில் வந்தன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சம்பா நெல் அறுவடை நடைபெற்றதில், அரசின் ந... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்! - சுகாதாரம், போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 7,850 வழங்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னமராவதி காந்தி சிலை எதிரே காங்கிரஸ் கட்சி நி... மேலும் பார்க்க

மச்சுவாடியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட மச்சுவாடியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்கோட்டை நகருக்கு அருகே தஞ்சாவூா் செல்லும் சாலையில் மச்சுவாடி உள... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவா்த்தனையில் பயணச்சீட்டுகள் விநியோகம்!

வங்கி அட்டைகள் மற்றும் க்யுஆா் கோடு மூலமான டிஜிட்டல் பரிவா்த்தனைகள் வழியே புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த 389 அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள... மேலும் பார்க்க

புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்!

புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க