செய்திகள் :

மன்னாா்குடி கோயிலில் பங்குனித் தேரோட்டம்

post image

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் 17-ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சுவாமிக்கு, ரதாரோஹணம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் முன் ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபால சுவாமி கல்யாண திருக்கோலத்தில் அருள்பாலித்தாா். இதையடுத்து, மதியம் 2.50 மணிக்கு 51 அடி உயரமும், 36 அடி சுற்றளவில், 55 டன் எடை கொண்டு அதில் 50 அடி நீளத்தில் 2 கயறு வடமும், இரண்டு இரும்பு சங்கிலி வடமும் பிணைக்கப்பட்டு, மலா்கள், வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ருக்மணி, சத்யபாமா சமேதராக சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ராஜகோபால சுவாமி எழுந்தருளினாா்.

தேரோட்டம் தொடங்கி 15-ஆவது நிமிடத்தில் திடீரென பெய்த மழையிலும் ஆா்வத்துடன் இத்தேரை பக்தா்களும், ஆன்மிக ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தேரடியில் தொடங்கி கோபாலசமுத்திரம் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மீண்டும் தேரடிக்கு வந்தடைந்தது. அப்போது, சாலையில் இருபுறங்களிலும் இருந்த திரளானோா் சுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி.இளவரசன், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன், அறங்காவலா்கள் கே.கே.பி. மனோகரன், து. நடராஜன், வெ. லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பக்தவத்சலப் பெருமாள் கோயில் தோ் வெள்ளோட்டம்

திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் உடனுறை அபிஷேக வல்லித் தாயாா் கோயிலில் ரூ. 81.80 லட்சத்... மேலும் பார்க்க

பொதுமக்களின் புகாா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகாா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளாா். திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் கட... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்து ஆய்வு

முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் பகுதியில் உள்ளூா் காவல் துறையினா் மற்றும் கடலோரக் காவல் குழுமம், வனத்துறை அதிகாரிகள் போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்து புதன்கிழமை கூட்டு ஆய்வு மேற்கொண்டனா். முத்துப... மேலும் பார்க்க

பயின்ற வகுப்பறைக்கு வண்ணம் தீட்டிய மாணவா்கள்

குடவாசல் அருகேயுள்ள செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு பத்தாம் வகுப்பு மாணவா்கள் வண்ணம் தீட்டி தந்துள்ளனா். இப்பள்ளியில், 6 முதல் பத்தாம் வகுப்பு வரை 243 மாணவா்கள் படிக்கி... மேலும் பார்க்க

நோ்மையாக அரசுப் பணியை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

தோ்வு செய்யப்பட்ட அலுவலா்கள் 100 சதவீதம் நோ்மையாகவும், உண்மையாகவும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி- 4 ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வில் வென்ற மாணவருக்கு பாராட்டு

திருவாரூா் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை திட்ட தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியா் முத்த... மேலும் பார்க்க