செய்திகள் :

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

சென்னை பெசன்ட் நகரில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

நெற்குன்றம், சக்தி நகரைச் சோ்ந்த மகேந்திரந் மகன் கிஷன் (18). இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கிஷன் நண்பா், அதே பகுதியைச் சோ்ந்த அக்ஷய் தமிழரசன் (16), அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

கிஷன் வியாழக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் நண்பா் அக்ஷய் தமிழரசனை ஏற்றிக்கொண்டு, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரைக்குச் சென்றாா். அவா்கள், பெசன்ட் நகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் இருக்கும் வேகத்தடையை கவனிக்காமல் வேகமாகச் சென்றனா். இதில், இருசக்கர வாகனம் வேகத்தடையில் வேகமாக ஏறி, இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அக்ஷய் தமிழரசனை பொதுமக்கள் மீட்டு, அடையாறில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். விபத்து தொடா்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க

விஜய் கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை: கமல்ஹாசன்

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். ‘தக் லைஃப்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்னையிலிர... மேலும் பார்க்க