செய்திகள் :

`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ் தாக்கரே கட்சியினர்

post image

மகாராஷ்டிராவில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி படிக்கவேண்டும் என்று ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவினர் கோரி வருகின்றனர். மும்பை மீராபயந்தர் பகுதியில் கடைக்காரர் ஒருவர் மராத்தி பேசவில்லை என்பதற்காக அவரை மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவினர் தாக்கினர். இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டது. இத்தாக்குதலை கண்டித்து மீராபயந்தர் பகுதி வியாபாரிகள் ஒரு நாள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து இத்தாக்குதலில் ஈடுபட்ட நவநிர்மான் சேனாவினர் 6 பேர் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தற்போது மேலும் ஒரு தொழிலதிபர் நவநிர்மாண் சேனாவினரின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். சுனில் கெடியா என்ற தொழிலதிபர் ராஜ் தாக்கரேயின் எக்ஸ் தள பக்கத்தில், நான் 30 ஆண்டுகளாக மும்பையில் இருக்கிறேன்.

உங்களின் மோசமான தவறான நடத்தையால், உங்களைப் போன்றவர்கள் மராத்தியர்களை பாதுகாப்பது போல் நடிக்க அனுமதிக்கப்படும் வரை, நான் மராத்தியைக் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று உறுதிபூண்டுள்ளேன். என்ன செய்வீர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை தொடர்ந்து சுனில் அலுவலகத்தை நவநிர்மாண் சேனாவினர் செங்கலால் தாக்கினர். அவர்கள் சாக்குமூட்டை ஒன்றில் செங்கலை கொண்டு வந்து தாக்கி அலுவலகத்தை சேதப்படுத்தினர். இதையடுத்து சுனில் மீண்டும் அதே எக்ஸ் தள பக்கத்தில், நூற்றுக்கணக்கான நவநிர்மாண் சேனா தொண்டர்களை கொண்டு வந்து தாக்குதல் நடத்துவதால் என்னை சுத்தமான மராத்தி பேசுபவராக மாற்றப்போவதில்லை.

அன்பு மட்டும்தான் மக்களை ஒன்றிணைக்கிறது. அச்சுறுத்தல் கிடையாது. என்னால் சுத்தமான மராத்தி பேச முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எதாவது வார்த்தையை தவறாக பேசினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எனக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா நிர்வாகி சந்தீப் தேஷ்பாண்டே வெளியிட்ட எக்ஸ்தள பக்க பதிவில், "சுனில் தொழிலில் கவனம் செலுத்தவேண்டும். மராத்தி குறித்து எதுவும் தவறாக பேசக்கூடாது. மராத்தியை அவமதித்தால் காதில் அடிவிழும்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை தொடர்ந்து தொழிலதிபர் சுனில் தான் இதற்கு முன்பு பதிவிட்ட பதிவுகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிவில், "சர்ச்சையைப் பெற விரும்புபவர்களால் இது கையாளப்படுகிறது. மராத்தி தெரியாதவர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டதால், நான் மிகையாக எதிர்வினையாற்றினேன். எனது மிகையான கருத்துக்களை நான் திரும்பப் பெற வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன்''என்று கூறினார்.

ம.பி: ஒரு சுவருக்கு பெயின்ட் அடிக்க 233 வேலையாட்கள்... திகைக்க வைத்த 'அரசுப் பள்ளி' பில்!

மத்தியபிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசு பணியின் செலவீன விவரங்கள் பொது மக்களை திகைக்க வைத்துள்ளது. சகண்டி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள ஒரு சுவரில் 4 லிட்டர் பெயி... மேலும் பார்க்க

Gurdeep Kaur: இந்தோரின் ஹெலன் கெல்லர் என்று இவர் கொண்டாடப் படுவது ஏன்? இவர் செய்த சாதனை என்ன?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் நகரைச் சேர்ந்தவர் குர்தீப் கவுர். விழித்திறன், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட இவர், வருமான வரித்துறையில் அரசு உத்தியோகம் பெற்று வரலாற்றுச் சாதனை ப... மேலும் பார்க்க

AI உதவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பெண் - எப்படி சாத்தியமாகியது?

18 ஆண்டுகளாக குழந்தை பெற முயன்ற அமெரிக்க தம்பதி, செயற்கை நுண்ணறிவால் (AI) கர்ப்பம் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் IVF சிகிச்சை மேற்கொண்டபோதிலும், முயற்சிகள் தோல்வியடைந்திருக்கிறது. காரண... மேலும் பார்க்க

தாய்லாந்து: நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய குடும்பம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தாய்லாந்தில் நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் கலாசின் மாநிலத்திலுள்ள ப்ரச்சயா ரிசார்டில் (Prachaya Resort) நான்கு வயது இரட்டையர்களு... மேலும் பார்க்க

Nipah virus: கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ் - சுகாதார அமைச்சர் சொல்வதென்ன?

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகின்றது என்பதால் மக்கள் மத்தியில் புதிய அச்சம் உருவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் கடுமையான மூளைக்காய்ச்சல் (AES) நோயால் பாதிக்கப்பட்டு உயிரி... மேலும் பார்க்க

12-ம் வகுப்பில் 26 முறை தோல்வி; ஆனாலும் பி.ஹெச்டி முடித்து முனைவரான பஞ்சாயத்து தலைவர்!

படிப்புக்கு எல்லையே கிடையாது என்று சொல்வார்கள். சிலர் முதுமை காலத்திலும் படிப்பை தொடருவார்கள். குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பி.எச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகும் 12வது வகுப்ப... மேலும் பார்க்க