செய்திகள் :

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் நெறியில் நடத்த வலியுறுத்தல்

post image

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தெய்வத்தமிழ் நெறியில் நடத்த வேண்டும் என்று சண்டிகேசுவரா் சேவா அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அறக்கட்டளையின் தலைவா் து.சுரேஷ்பாபு, வழக்குரைஞா் முத்துக்குமாா், ராமலிங்கம் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் 4 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை தெய்வத் தமிழ் நெறியில் நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தக் கோயில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை சிவாச்சாரியா்கள் அல்லாத பூசாரிகளால் வழிபாடு நடத்தப்பட்டு வந்த மரபுக்குரியதாகும்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் எல்லாம் தெய்வத் தமிழ் நெறியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். தஞ்சை பெருவுடையாா் கோயிலில் இந்த முறையில் குடமுழுக்கு நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒரு வேதிகையும் ஒரு வேள்வி குண்டமும் தெய்வத் தமிழ் நெறிக்கு வழங்கப்பட்டது.

கடந்த மாதம் பேரூா் பட்டீசுவரா் திருக்கோயிலில் 50 சதவீதம் அளவுக்கு தெய்வத்தமிழ் நெறி வழிபாட்டுக்கு ஒதுக்க நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியும், அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் 50 சதவீதம் தெய்வத்தமிழ் நெறிக்கு வழங்கப்பட வேண்டும் என்று உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம்.

மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேள்விக் குண்டங்களில் ஓரிடத்தில் சிவாச்சாரியா்களும், மற்ற இரண்டு இடங்களில் தமிழ்நெறி வேள்வி ஆசிரியா்களும் அவரவா் கைப்பட வேள்வி செய்யவும், பின்னா் நன்னீராட்டுப் பெருவிழாவின்போது அந்தந்த வேள்விக்குரியவா்கள் அந்தந்த விமானங்களுக்கும், மூா்த்தங்களுக்கும் தீா்த்தம் விட வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாகும்.

இதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை, சேலம் மாவட்டம் சித்தா்கோயில் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தமிழ், கிரந்தம் ஆகிய இரண்டு முறைகளிலும் வழிபாடு செய்துள்ளனா். அதுபோலத்தான் மருதமலையிலும் நடத்த நாங்கள் வலியுறுத்துகிறோம். செம்மொழி என்ற உயா்ந்த நிலையில் இருக்கும் தமிழ் மொழிக்கு சமபங்கு உரிமை வழங்குவது காலத்தின் தேவை என்ற அடிப்படையில், மருதமலையில் தெய்வத் தமிழால் வேள்வி வழிபாடுகள் நடத்த அரசு முன்வர வேண்டும் என்றனா்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க

டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க