செய்திகள் :

மருத்துவர் நம்பெருமாள் சாமி மறைவு: சு.வெங்கடேசன் எம்பி இரங்கல்

post image

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரும், கண் மருத்துவப் பேராசிரியருமான நம்பெருமாள் சாமி மறைவுக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரும், கண் மருத்துவப் பேராசிரியருமான நம்பெருமாள் சாமி முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு மருத்துவத் துறையினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

அரவிந்த் கண் மருத்துவமனை, நீரிழிவு விழித்திரை நோய் நிபுணர், மாமதுரையின் மற்றுமொரு அடையாளம் நம்பெருமாள் சாமி காலமானார். குறைந்த பார்வை உதவி மையத்தை இந்தியாவில் முதன் முறையாக அரசு இராஜாஜி மருத்துவமனையில் நிறுவியவர்.

கண் அறுவை சிகிச்சையில் அசெம்பிளி லைன் செயல்திறன் கொண்டு வந்தது உள்ளிட்ட ஏராளமான செயற்கரிய செயல்களை செய்த பெருமைக்குரியவர்.

2010 ஆம் ஆண்டில், டைம் பத்திரிகை மருத்துவர். நம்பெருமாள்சாமியை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது.

நம்பெருமாள்சாமி தலைமையில், அரவிந்த் கண் மருத்துவமனை, 2010 ஆம் ஆண்டுக்கான கான்ராட் என். ஹில்டன் மனிதாபிமான பரிசைப் பெற்றது .இது மனித துன்பத்தைப் போக்க அசாதாரணமான பணிகளைச் செய்யும் நற்செயலுக்கு வழங்கப்படும் பெருமைக்குரிய விருது.

மருத்துவத்துறையின் அடிப்படையாக சேவை குணம் இருக்க வேண்டும் என்பதில் எப்பொழுது கவனம் கொண்டிருப்பவர். இவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கும் அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிபதி ஆஜராக உத்தரவு

Madurai Lok Sabha member Su. Venkatesan condoles the passing away of Namperumal Samy, one of the founders of Madurai Aravind Eye Hospital and professor of ophthalmology.

மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை: துரை வைகோ

கோவை: மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார். கோவை ... மேலும் பார்க்க

அசைக்க முடியாத இயக்கமாக திமுகவை மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் சூளுரை

எந்த இயக்கத்திலும் இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகள் கிடையாது, இந்தியாவிலேயே அசைக்க முடியாத இயக்கமாக நம் திமுகவை மாற்றுவோம் என சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணிக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்ட... மேலும் பார்க்க

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அப... மேலும் பார்க்க

நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.நிகழாண்டு ... மேலும் பார்க்க

கார்கில் வெற்றி நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்

கார்கில் வெற்றி நாளையொட்டி, நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு இராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆ... மேலும் பார்க்க

3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க