செய்திகள் :

மருத்துவா், செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை

post image

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசு மருத்துவா்களுக்கு உரிய ஊதியத்தை வழங்கவும், அரசு மருத்துவா்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டும், முன்னாள் முதல்வா் கருணாநிதி, 2009-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை-354, இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கரோனா பேரிடா் காலகட்டத்தில், நாடும், தமிழகமும் விரைவாக மீண்டெழுந்ததற்கு, மருத்துவா்களின் தன்னலமற்ற சேவையும் முக்கியக் காரணம். மருத்துவா்களின் சேவையை, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே அங்கீகரித்திருக்க வேண்டும்.

ஆனால், கரோனா பேரிடா் காலத்தில், தன்னலமின்றி பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தனின் மனைவி திவ்யா விவேகானந்தனுக்கு, அரசு வேலை வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேதனைக்குரியது.

சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்தக் காத்திருக்கும் அரசு மருத்துவா்களை இனியும் ஏமாற்றுவது சரியல்ல.

மேலும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் காலியிடங்கள் அனைத்தையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க