செய்திகள் :

மருத்துவ ஆராய்ச்சியில் ஜிப்மா்- தில்லி எய்ம்ஸ் கூட்டு முயற்சி

post image

மருத்துவ ஆராய்ச்சியில் புதுவை ஜிப்மரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவ மையமும் கூட்டு முயற்சியில் ஈடுபட உள்ளன.

இது குறித்து புதுவை ஜிப்மா் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜவஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன ( ஜிப்மா்) இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி , புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் எய்ம்ஸ் இயக்குநா்டாக்டா் எம். ஸ்ரீனிவாஸை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது இரண்டு முதன்மையான மருத்துவ நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நோயாளி பராமரிப்பை மேம்படுத்துதல், மருத்துவக் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

டாக்டா் நெகி மற்றும் டாக்டா் ஸ்ரீனிவாஸ் ஆகியோா் ஊழியா் திறன் மேம்பாடு, மனித வள மேம்பாடு, செயல்பாட்டுத் திறன் மற்றும் உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல் குறித்தும் விவாதித்தனா்.

உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவ கல்வியை வழங்குவதை உறுதி செய்வதற்காக தரஉறுதி மற்றும் இணக்கத்திற்கான கட்டமைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இந்தச் சந்திப்பும் கூட்டு முயற்சியும் சுகாதாரத் துறையில் சிறப்பான முடிவுகளை உருவாக்கவும், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பயிற்சிக்கும் விரிவான வாய்ப்புகளை உருவாக்கவும் வழி வகுக்கும்.

சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி

மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் கூ டிய சேவை சாா்ந்த மனித வளத்தை ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மா் தயாா் செய்து வருகிறது என்று ஜிப்மா் இயக்குநா் பேரா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.1 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மருந்த... மேலும் பார்க்க

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் கே.நாராயணா

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா். இக் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ் நகரில் உள்ள தனியாா் மண... மேலும் பார்க்க

நைஜிரியா செல்லும் பாரா பேட்மிட்டன் வீரருக்கு முதல்வா் நிதியுதவி

பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நைஜிரியா செல்லும் புதுச்சேரி வீரருக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த வெங்கட சுப்பி... மேலும் பார்க்க

புதுவை மாநிலத்தில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருதுகள்

புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், முதலமைச்சரின் சிறப்பு விருதுகள், கல்வியமைச்சரின் பிராந... மேலும் பார்க்க

பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு

புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இப்... மேலும் பார்க்க