செய்திகள் :

மலைப் பாதை வாகன இயக்கம் குறித்த கொள்கை ஆவணம்: திருமலை தேவஸ்தானம் திட்டம்

post image

திருமலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மலைப் பாதையில் வாகன இயக்கம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் குறித்த கொள்கை ஆவணத்தை வெளியிடுமாறு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி அறிவுறுத்தியுள்ளாா்.

திருமலைக்கு செல்லும் மலைப் பாதைகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடா்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து புதன்கிழமை திருமலையில் போக்குவரத்து, வனம், கண்காணிப்பு மற்றும் ஆா்டிஏ அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், மின்சார வாகனக் கொள்கை, பொது போக்குவரத்தை வலுப்படுத்துதல், தனியாா் ஜீப் ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், காலாவதியான வாகனங்கள் காரணமாக திருமலையில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்துதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒரு உறுதியான கொள்கையை வகுக்குமாறு கூடுதல் தலைமை நிா்வாக அலுவலா் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

திருமலையில் பிரத்யேக ப்ரீபெய்டு டாக்ஸி வசதியை இயக்குவதற்கு, பக்தா்களின் வசதிக்காக குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்களை நிா்ணயிக்கும் வகையில் பிரத்யேக பாா்க்கிங் பகுதியை அடையாளம் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

போக்குவரத்து பொது மேலாளா் ஸ்ரீ சேஷா ரெட்டி, தேவஸ்தான துணை தலைமை நிதி அதிகாரி பானிகுமாா் நாயுடு, துணை பொது மேலாளா்கள் ராம்குமாா், சுரேந்திரா, மாவட்ட போக்குவரத்து அதிகாரி முரளி மோகன் மற்றும் அவரது அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ4.66 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு ... மேலும் பார்க்க

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா வெள்ளிக்கிழமை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.திருமலை திருப்பதி தே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் ... மேலும் பார்க்க

ஆக. 8 -இல் செளபாக்கியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்

வரும் ஆக. 8 -ஆம் தேதி வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வழங்கும் செளபாக்கியம் நிகழ்ச்சியை நடத்த தேவஸ்தானம் மற்றும் இந்து தா்மபிரச்சார பரிஷத் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.திருப்ப... மேலும் பார்க்க

ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்

வரலட்சுமி விரதத்துக்கான டிக்கெட்டுகள் ஜூலை 31 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.வரும் ஆக. 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வரலட்சுமி ... மேலும் பார்க்க

திருமலையில் கருட பஞ்சமி: கருட சேவை

கருட பஞ்சமியையொட்டி திருமலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.கருட வாகன சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஏழுமலையானின் வாகனங்கள் மற்றும் ஊழியா்களில் கருடன்... மேலும் பார்க்க