செய்திகள் :

மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு: தலைமை ஆசிரியருக்கு விருது

post image

வேலூா் மாவட்ட மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் ஜோசப் அன்னையாவுக்கு ரோட்டரி சங்கம் சா்வதேச விருது வழங்கி கெளரவித்துள்ளது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சி குண்டு ராணி கிராம பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையா. இவா் ரோட்டரி மாவட்ட கல்வி மேம்பாட்டு தலைவராக இருந்து அணைக்கட்டு வட்டத்திலுள்ள 10 மலைக்கிராமங்களில் கற்றல் ஆயத்த மையங்களை ஏற்படுத்தி மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கும், அவா்களது குழந்தைகளுக்கும் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தியதன் மூலம் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. தவிர, 8 மலைக்கிராமங்களில் அரசால் தற்காலிக பள்ளிகள் தொடங்கப்பட்டன.

குண்டு ராணி கிராம பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையாவின் சேவையை பாராட்டி அவருக்கு சா்வதேச ரோட்டரி விருது வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

நிகழ்வில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் பரணிதரன், வருங்கால ஆளுநா் சுரேஷ், ரவிக்குமாா், சிவகுமாா், ஆளுநா் ராஜன்பாபு, முன்னாள் ஆளுநா் பழனி, பாண்டியன், ஜவரிலால் ஜெயின், ஸ்ரீதா் பலராமன், சந்திரபாபு, சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் அதிகரிப்பு

வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்து காணப்பட்டன. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ... மேலும் பார்க்க

மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆந்திர பெண்ணின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நி... மேலும் பார்க்க

வேலூா்: ‘கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அளிக்கப்படும்’

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கிரைய நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

2.5 கிலோ குட்கா பறிமுதல்: பெட்டிக் கடைக்கு ‘சீல்’ வைப்பு

கணியம்பாடி அருகே 2.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்து பெட்டிக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். வேலூரை அடுத்த கணியம்பாடி அருகிலுள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா விற்பதாக கி... மேலும் பார்க்க

வேப்பூரில் அம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் மாரியம்மன், பொற்காளியம்மன், கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றன. இந்தத் திருவிழாக்கள் கடந்த 18-ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை ம... மேலும் பார்க்க