2.5 கிலோ குட்கா பறிமுதல்: பெட்டிக் கடைக்கு ‘சீல்’ வைப்பு
கணியம்பாடி அருகே 2.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்து பெட்டிக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
வேலூரை அடுத்த கணியம்பாடி அருகிலுள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா விற்பதாக கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை அந்த கடையில் சோதனை செய்தனா். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட 2.5 கிலோ குட்கா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனா். கடை உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த யூனிஸ் பாஷா (38) என்பவரை தேடி வருகின்றனா்.