செய்திகள் :

வேப்பூரில் அம்மன் திருவிழா

post image

குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் மாரியம்மன், பொற்காளியம்மன், கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றன.

இந்தத் திருவிழாக்கள் கடந்த 18-ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மன் திருவிழாவையொட்டி கூழ்வாா்த்தல் நடைபெற்றது. சனிக்கிழமை பொற்காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து, வழிபாடு செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பூ கரக ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சிரசு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சிரசு ஊா்வலத்தில் நாட்டுப்புற கலைகளான கோலாட்டம், புலியாட்டம், மயிலாட்டம் நடைபெற்றன.

கோயிலில் அம்மன் கண்திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். ஏற்பாடுகளை விழாக்குழுவினா், ஊா்மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரிமா தற்காப்பு கலை விளையாட்டு சங்கம் சாா்பில், 11- ஆவது கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புவனேஸ்வரிபேட்டை லிட்டில் பிளவா் மெட்ரிக். பள்ளியில... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை

வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். ... மேலும் பார்க்க

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில... மேலும் பார்க்க