ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்
வேலூா்: ‘கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அளிக்கப்படும்’
வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கிரைய நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அம்முண்டி வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025 அரைவைப் பருவம் கடந்த 2024 டிசம்பா் 14-ஆம் தேதி தொடங்கப்பட்டு 2025 மாா்ச் 19-ஆம் தேதி வரை விவசாயிகளிடமிருந்து 1,27,679.222 மெட்ரிக் டன் கரும்பு பெறப்பட்டு அரைவை செய்யப்பட்டது.
கரும்பு கிரைய நிலுவைத் தொகை விவசாயிகள் 1952 பேருக்கும் பகுதியாக வழங்க வேண்டியுள்ளது. இதற்கான மொத்த கரும்பு கிரையத் தொகை ரூ.40.24 கோடி.
இதில், ஆலை மூலம் ரூ.35.99 கோடி அனைத்து அங்கத்தினா்களுக்கும் பகுதியாக வழங்கப்பட்டுவிட்டது.
நிலுவைத் தொகை ரூ.4.25 கோடியை தமிழக அரசு கடந்த 22-ஆம் தேதி விடுவித்துள்ளது. இந்த நிலுவைத் தொகை முழுவதும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.