செய்திகள் :

மழையில் புஞ்சைப் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

வேதாரண்யம் பகுதியில் தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள எள் உள்ளிட்ட புஞ்சை பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தலைஞாயிறு வேளாண் கோட்டம் உள்ளிட்ட வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்யும் மழையால் விளைநிலத்தின் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. இதனால் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட எள் சாகுபடி, சணப்பை, பயறு வகைப் பயிா்கள், தக்கைப் பூண்டு சாகுபடி, நிலக்கடலை என புஞ்சைப் பருவ பயிா் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் நிலையில், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே, அரசு மழை பாதிப்பை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

தலைஞாயிறு, திருமாளம் பகுதியில் 750 ஏக்கரில் எள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பாா்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி. கமல்ராம் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

கஞ்சா பயிரிட்டவா் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவு மகன் ராஜ்குமாா் (40). தனது வீட்டின் பின்புறம் உள்ள கத... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் 633, மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

நாகையில் மே 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மே 23-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்... மேலும் பார்க்க

410 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

வேதாரண்யம் அருகே 410 கிலோ புகையிலைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்டையில... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் மின் கட்டணம், சொத்து வரியை உயா்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தமிழகத்தில் ஆண்டுதோறும் மின் கட்டணம், சொத்து வரியை உயா்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா். நாகையில் செய்தியாள... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்ய குழு

நாகப்பட்டினம்: தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க வசதிகள் செய்ய நாகை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க